Skip to main content

முதலீடுகளைப் பெற  “லாயக்கில்லை” என்றால், “இந்த ஆட்சி எதற்குமே லாயக்கில்லை” -பொன்முடி  

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளருமான க.பொன்முடி  அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் அமைச்சர் எம்.சி. சம்பத்திற்கு எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து, சுட்டு விரலை நீட்டும் தகுதி அறவே இல்லை என அறிக்கை  வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,

 

former minister ponmudi report

 

“முதலீடுகள் எங்கே” என்று கேட்டால் அதற்கு பதிலளிக்கத் தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ளாத தொழில்துறை அமைச்சர்  எம்.சி. சம்பத் “திமுக தலைவர் வெற்றுக் கூச்சல் போடுகிறார்” என்று கூறியிருப்பதற்கும், அரசு செய்தி வெளியீடு என்பதை அரசியலுக்காகப் பயன்படுத்தும் அதிகார அத்து மீறலுக்கும், துஷ்பிரயோகத்திற்கும், கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பும் போதெல்லாம்,  “பொய்” ஒன்றையே மூலதனமாக வைத்து, செயல்படுவதாகப் “பந்தா” காட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அவருடன் “வெளிநாடு சுற்றுலா” சென்று விட்டு வந்த தொழில்துறை அமைச்சரும்,  “தகவல் பஞ்சத்தில்” அடிபட்டு வீண் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழகம் அறியும். அந்நிய முதலீடுகள் 25 சதவீதம் குறைந்து விட்டதாக மத்திய அரசின் “Director for Promotion of Industry and Internal Trade” நிறுவனமே கூறியிருப்பதை அமைச்சர் ஜமுக்காளம் போட்டு மூடி மறைக்க முயற்சிக்கிறார். வேலை வாய்ப்பு இல்லாமல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறியதையும், பல தொழிற்சாலைகள் மூடப்படுவதையும், சிறுகுறு தொழில்கள் நலிவடைந்து போனதையும்- ஏன் ஒரு கோடி இளைஞர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு இல்லாமல் காத்திருப்பதையும் மறைக்க “அறிக்கை” என்ற பெயரில் அமைச்சர் நாடகமாடுகிறார்.

தன் அறிக்கையில் “முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது” “புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கும் தொழில் துறை அமைச்சர், “அதிமுக ஆட்சியில் தனியார் துறை முதலீடு 1,02,772 கோடி ரூபாய்” என்றும், “2015 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல்வேறு நிலைகளில் உள்ள முதலீடு 104961 கோடி ரூபாய்” என்றும் “கற்பனைக் கதை” குதிரையைத் தட்டி விட்டு, சறடு திரித்திருக்கிறார். அவரது கற்பனையை அவர் தாக்கல் செய்த 2019-20 ஆண்டிற்கான தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பே தவிடு பொடியாக்கியுள்ளது. தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் “தொழில்துறையின் சார்பாக கையொப்பமிட்ட 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 28 நிறுவனங்கள்,19,228 கோடி ரூபாய் மதிப்பில் மட்டுமே வணிக உற்பத்தி தொடங்கியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வரியிலேயே  “இந்த 19,228 கோடியிலும், 17 309 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளதாகவும், 23 353 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் நிறுவனங்கள் கூறியிருக்கின்றன” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அது கூட அரசின் தகவல் அல்ல. ஆகவே 104961 கோடி ரூபாய் முதலீடு பெற்று விட்டதாக அமைச்சர் கூறுவது வடிகட்டிய பொய்!

சட்டமன்றத்தில் அமைச்சர் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பிலேயே “முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் இவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது” என்று எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, “முதலீடு செய்துள்ளதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவே” அமைச்சர் கூறியிருக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- அதன்படி வந்த முதலீடுகள் - கிடைத்த வேலை வாய்ப்புகள் குறித்து அரசிடம்நம்பகமான  எந்தத் தகவலும் இல்லை என்பதை விட ஒரு கேவலம் இந்த ஆட்சிக்குத் தேவையா?

2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முகத்திரையை அதிமுக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பின் பக்கம் 18-ல் உள்ள தகவல்களே கிழித்துத் தோரணமாக தொங்க விட்டிருக்கிறது. “தொழில்துறையால் போடப்பட்ட 147 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்று கூட இன்னும் அமலுக்கு வரவில்லை” என்பது அதில் தெளிவாக உள்ளது. அதை மீண்டும் ஒரு முறை அமைச்சரே படித்துப் பார்த்து “அறிந்து” கொள்வது நல்லது. உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் இரண்டிலும் வெளியிடப்பட்ட பத்திரிக்கை குறிப்புகளில் இருக்கும் தகவல்களைச் சேகரித்து- அவற்றை அமைச்சர் ஒரு அறிக்கையாக  வெளியிட்டு விட்டால் “முதலீடுகள் வந்து விட்டது” என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்ததில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிமுக அரசின் ஒவ்வொரு கொள்கை விளக்கக் குறிப்புகளிலும், “புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 64 திட்டங்கள் வெவ்வேறு செயல்பாட்டில் இருந்து வருகிறது” என்று கூறிக் கொண்டே வருகிறார்களே தவிர, இன்றுவரை ஒரு முதலீடும் வரவில்லை; ஒரு தொழிற்சாலையும் வரவில்லை என்பதே உண்மை. இந்நிலையில், “கமிஷனில்” மூழ்கிக் கிடக்கும் எம்.சி. சம்பத், எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து கண்டன அறிக்கை விடுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஆகவே இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு “சொந்தக் கட்சி மாநாடுகள்” போலவும், “வெளிநாட்டுப் பயணம்” ஒரு சுற்றுலா போலவும் உல்லாசமாக நடத்தி, தொழில்துறையை படு பாதாளத்தில் தள்ளி விட்டது அதிமுக ஆட்சி.

முதலீடுகளைப் பெற இந்த ஆட்சி “லாயக்கில்லை” என்றால், “இந்த ஆட்சி எதற்குமே லாயக்கில்லை” என்பதைத்தான் வங்கிக் கடனில் 800 கோடி மதிப்பில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷனின் (TANCEM) விரிவாக்க ஆலை மூடிக் கிடப்பதில் தெரிகிறது. அரியலூர் சிமென்ட் விரிவாக்க ஆலை பணிகள் முடிந்து 17 மாதங்களாக உற்பத்தியைத் துவங்கவில்லை. இதனால் பாரத வங்கியில் வாங்கிய 600 கோடி ரூபாய் கடனுக்கு 68 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி கட்டியாகி விட்டது. சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான மைனிங் லைசென்ஸுகளை புதுப்பிக்கத் தவறியதால் மத்திய அரசுக்கு 50 கோடி ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட கொடுமையாக ஒரு டன் சுண்ணாம்புக்கல் 300 ரூபாய் மதிப்பில் தன் கைவசமே வைத்திருக்கும் “டான்செம்” நிறுவனம்,  இப்போது வெளிநாட்டிலிருந்தும் டன் ஒன்றிற்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்து இறக்குமதி செய்கிறது என்றால், இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? . ஆகவே அதிமுக ஆட்சியில் வெளியிலிருந்தும் முதலீடுகளைப் பெற முடியாது. மாநிலத்தில் உள்ள ஆலை விரிவாக்கத்தையும் செய்ய முடியாது என்ற “கையாலாகத்தனத்தின் மூலதனமாக” அமைச்சர் திரு எம்.சி சம்பத்தும், அவருடைய முதலமைச்சரும் இருக்கிறார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

தி.மு.க. ஆட்சியில், தொழில்துறை “வளர்ச்சியின் நட்சத்திரமாக” இருந்தது. “ஆக்ஸ்போர்டு அனால்டிகா” என்ற நிறுவனம் இந்திய அளவில் ஆய்வு நடத்தி, “இந்தியாவிலேயே வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏற்ற முதன்மை மாநிலம் தமிழகம்” என்று பாராட்டியது. 2006 முதல் 2011 வரை 62,349 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று, அதன் மூலம் 2,35,464 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கியது கழக அரசு. அமைச்சர் தன் சொந்த ஊருக்குச் செல்லும் போது வழி நெடுகிலும் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையுள்ள தொழிற்சாலைகள் கழக ஆட்சியில் துவங்கப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அமைச்சர் வீட்டிலிருந்து மத்திய கைலாஷைத் தாண்டிச் சென்றார் என்றால், அவர் கண்ணில் படும் “டைடல் பார்க்” கழக ஆட்சியின் சாதனை. ஏன் “ஒற்றைச்  சாளர முறையில் விரைந்து தொழில் தொடங்கும் அனுமதி வழங்க” தனியாகச் சட்டமே கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவும், எங்கள் கழகத் தலைவர் தொழில்துறையைக் கவனிக்கும் துணை முதலமைச்சராகவும் இருந்த கழக ஆட்சி! இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமல் “அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும்”, “பூனை கண்ணை மூடிக்கொண்டால்” என்ற நிலையில் இருக்கும் அமைச்சர் திரு எம்.சி. சம்பத்திற்கு  எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து, சுட்டு விரலை நீட்டும் தகுதி அறவே இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறப்படுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.