Former Minister Manikandan is being prosecuted under 5 sections!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி புகார் அளித்திருந்த நிலையில்,நடிகை சாந்தினி அளித்த புகாரில்முன்னாள் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்த புகார் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அந்த விசாரணைக்கு பிறகு வழக்கானது அடையாறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் இதுதொடர்பாக விசாரணை செய்து வந்த நிலையில், 5 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்களை காவல் நிலையம் தெரிவிக்கவில்லை. ஆனால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வழக்கில்ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் சம்மன் அனுப்பி, முன்னாள் அமைச்சர் மணிகண்டனைநேரில் அழைத்து விசாரணை செய்யவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment