Skip to main content

நிச்சயம் செய்யப்பட்ட மணப்பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் குத்தியதால் திருவாரூரில் பரபரப்பு!

Published on 07/10/2018 | Edited on 07/10/2018

திருத்துறைப்பூண்டி அருகே நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை வீடு புகுந்து கத்தியால் குத்திவிட்டு தப்பிய முன்னாள் காதலனால் பரபரப்பு உண்டாகியுள்ளது. 

 

attack

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடுபலம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிசந்திரன் விவசாய தொழிலாளி. இவரது மகள் அரவிந்தியா வயது 22 ஆசிரியர் பட்டபடிப்பு படித்துள்ளார்.  இவருக்கு 15 தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிங்காளந்தியை சோ்ந்த முத்தரசன் வயது 22 என்பவன், ரவிசந்திரன் வீட்டிற்குள் புகுந்து அவரது மகள் அரவிந்தியாவை கத்தியால் குத்தியுள்ளான். இதனை தடுக்க முயன்ற அவரது தாய் அம்சவல்லியையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளான்.

 

இதில் படுகாயமடைந்த அரவிந்தியா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டுமேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த அம்சவள்ளிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான முத்தரசனை தேடி வருகின்றனர். "முத்தரசன் அரவிந்தியாவை பள்ளியில் படிக்கும்போது காதலித்தாகவும், அரவிந்தியா அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றி வேறு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது." என்கிறார்கள் அந்தகிராமவாசிகள். 

 

முத்தரசன் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டு அவன் மீதுபல வழக்குகள் ஏற்கனவே உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்; வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A attack on the police who went to catch a ganja dealer; Exciting scenes released

சென்னை கண்ணகி நகர் சுனாமி நகர்  குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா ஆசாமி, அந்தப் பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.