Skip to main content

தமிழ்நாடு ஆளுநராகும் இரண்டாவது காவல்துறை அதிகாரி ஆர்.என்.ரவி!

Published on 10/09/2021 | Edited on 10/09/2021

 

 

former ips officer appointed the governor of tamilnadu

தமிழ்நாடு ஆளுநராக ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழ்நாடு ஆளுநர் நியமனத்தில் பின்னணி குறித்து பார்ப்போம்!


தமிழ்நாடு ஆளுநராக இருந்தவர்களில் மிக சிலர் மட்டுமே அரசியல் பின்னணி இல்லாதவர்கள். அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. காவல்துறையைப் பின்னணியாகக் கொண்ட பிரமுகர் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2002- ஆம் ஆண்டு ஆந்திர மாநில காவல்துறை முன்னாள் டி.ஜி.பி. பிஎஸ் ராமமோகன் ராவ் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணக்கமானக் போக்கைக் கடைபிடித்த பிஎஸ் ராமமோகன் ராவ், இரண்டு ஆண்டுகளிலேயே வடகிழக்கு மாநிலங்கள் ஒன்றின் ஆளுநராக மாற்றப்பட்டார்.

 

ஆனால் அந்த இடமாற்றத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. எனினும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்காத நிலையில், தனது ஆளுநர் பதவியை பிஎஸ் ராமமோகன் ராவ் ராஜினாமா செய்தார். 

 

இந்த நிலையில், பிஎஸ் ராமமோகன் ராவுக்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து மற்றொரு ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பை ஏற்கிறார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்று நான்கு மாதங்களில் புதிய ஆளுநர் நியமனம் நடைபெற்றுள்ளது. காவல்துறை, உளவுத்துறைச் செயல்பாடுகளில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட, தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக மத்திய அரசு தேர்வு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் நீண்ட காலமாக நிலவி வந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததில் ஆர்.என்.ரவியின் பங்கு முக்கியம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதம் ஏந்திக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை சரணடைய வைத்து, அமைதி பாதைக்கு திரும்ப வைத்ததில் முக்கிய பங்காற்றியவர். பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அது தொடர்பான உளவு தகவல் சேகரிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதில் ஆர்.என்.ரவி மிகச்சிறந்த நிபுணர் ஆவார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.