Skip to main content

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் சொத்துகள் முடக்கம்...

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

Former DMK minister Ponmudi's son's assets frozen ...

 

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி. இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள எடையார் கிராமம். இவர் விழுப்புரம் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவரது மூத்த மகன் டாக்டர் பொன் கௌதம சிகாமணி. 

 

இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றவர். இவர் கடந்த 2008ஆம் ஆண்டில் இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள ‘பிடி எக்சல் மெகிண்டோ’ என்ற நிறுவனத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக ஒரு லட்சம் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில்  41.57 லட்சம் ரூபாய்க்கு 2.45 பங்குகளை  மேற்படி கம்பெனியில்  முதலீடு செய்து வாங்கியுள்ளார். என்றும் அதேபோல் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனம் ஒன்றில் 55,000 அமெரிக்க டாலருக்கு அப்போதைய இந்திய மதிப்பில் 21.86. லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளதாகவும் இதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் பொன் கௌதம சிகாமணி என்றும் இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்தனர். 

 

இதன்மூலம் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின்கீழ் தமிழகத்தில் கௌதம சிகாமணிக்கு சொந்தமான விவசாய நிலம் வணிக வளாகம் உட்பட ரூ.8.60 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத் துறையினர் நேற்று முடக்கம் செய்துள்ளனர். இந்த முறைகேடு நடந்தபோது பொன்முடி, உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்துள்ளார் என்று அமலாக்கத் துறை தெரிவிக்கின்றது. மேலும் வெளிநாடுகளில் முதலீடு செய்யுமளவிற்கு இவ்வளவு பணம் பொன் கௌதம சிகாமணிக்கு எப்படி வந்தது என்பது குறித்து கௌதம சிகாமணி எம்.பி.யிடம் விசாரிக்கவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

முன்னாள் தி.மு.க. அமைச்சர் தற்போது கட்சியில் தலைமை பொறுப்பில் உள்ளவர் பொன்முடி, அவரது மகன் டாக்டர் பொன் கௌதம சிகாமணி தற்போது எம்.பி.யாக உள்ள நிலையில் அமலாக்கத்துறை அவரின் சொத்துக்களை முடக்கம் செய்துள்ளது. இது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது