Skip to main content

இந்திராகாந்தியை வீட்டிற்கே சென்று கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்

Published on 24/06/2019 | Edited on 24/06/2019

 

ஓய்வுபெற்ற தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருநத அவரது உடலுக்கு காவல்துறையினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

 

v r lakshminarayanan ips indra gandhi



 

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட லட்சுமி நாராயணன் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். பின்னர் சட்டப்படிப்பை முடித்த அவர், குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று 1951ல் ஐ.பி.எஸ். அதிகாரியானார். மதுரை மாவட்ட ஏ.எஸ்.பி.யாக பணியாற்றிய அவர், சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டார். டெல்லியில் பணியாற்றிய அவர் சிபிஐ-யில் இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். 
 

1977ல் ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை துணிச்சலாக அவரது வீட்டிற்கே சென்று கைது செய்தவர் வி.ஆர்.லட்சுமி நாராயணன். 1980ல் மீண்டும் இந்திரா காந்தி பிரதமரானபோது, தன்னை கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணனை சிபிஐ இயக்குநராக்க முன்வந்தார். அப்போது எம்ஜிஆர், தமிழக பணிக்கு லட்சுமி நாராயணன் தேவை என்று இந்திராவிடம் கோரிக்கை வைத்து, மாநில பணிக்கு கொண்டு வந்ததுடன் லட்சுமி நாராயணனை  டிஜிபி ஆக்கினார். 
 

சட்டம் ஒழுங்கு டிஜிபி-ஆக இருந்த லட்சுமி நாராயணன் தமிழக காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி-ஆகவே லட்சுமி நாராயணன் 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 'நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்' என்ற நூலை எழுதியுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் சகோதரர் வி.ஆர்.லட்சுமி நாராயணன். 



 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்’ - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
13 IPS officers transferred TN govt action

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.யாக உள்ள தேன்மொழி, தமிழக போலீஸ் அகாடமிக்கு ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், பதவி உயர்வில் திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையராக இருந்த ரோஹித் நாதன் ராஜகோபால் கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பதவி உயர்வில் கோவை நகர வடக்குப் பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஏ.எஸ்.பி. விவேகானந்தா சுக்லா பதவி உயர்வில் திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரி பதவி உயர்வில் மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வி. அன்பு சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராகவும், எஸ். வனிதா மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டி. ரமேஷ்பாபு நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும், எஸ்.எஸ். மகேஸ்வரன் சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராகவும், மதுரை நகர் துணை ஆணையர் பாலாஜி காவலர் நலத்துறையின் ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் கடலோர காவல்படை எஸ்.பி. ஆதி வீரபாண்டியன் சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மதுரை, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Madurai, Sivagangai Police S.P. Transferred!

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.