Skip to main content

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் குருகுலம்.

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் குருகுலம். அது ஈரோடு தான் ஈரோட்டில் தந்தை பெரியாரின் இல்லத்தில் கலைஞர் பணியாற்றினார். அதிலிருந்து பெரியாரின் தொண்டனாக அண்ணாவின் சீடராக வளர்ந்து திமுகவில் தலைமைப் பொறுப்புக்கு வந்து ஐந்து முறை முதல்வராக பணியாற்றியவர் மறைந்த முதல்வர் கலைஞர். இவருக்கு சிலை வைக்க வேண்டும் என ஈரோடு திமுகவினர் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டார்கள்.


ஈரோட்டின் மைய பகுதியில் உள்ளது பன்னீர்செல்வம் பூங்கா. இந்தப் பூங்காவின் முகப்பில் இருந்த தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளை போக்குவரத்து நெரிசல் என காரணம் காட்டி அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தபோது, ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் மாநகராட்சியிடம்? தலைவர்கள் சிலை அங்கேயே போக்குவரத்து நெரிசல் இல்லாமல் நாங்கள் வைக்கிறோம் என கூறி மாநகராட்சியிடம் அனுமதி பெற்றனர். அதன் பிறகு பூங்காவின் முகப்பிலிருந்து பெரியார் அண்ணா சிலை பூங்காவின் பின்புறம் பகுதியை சீரமைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் கட்டிடம் கட்டி பெரியார் அண்ணா சிலைகள் திமுகவினர் நிறுவினார்கள் இச்சிலைகளை சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவராக உள்ள மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.


இந்த சிலைகள் உள்ள மேடையில் மேலும் மூன்று சிலைகள் அமைக்க வசதியாக இடம் வைத்து வைத்திருந்தனர் மே டை அமைத்த ஈரோடு திமுகவினர் இந்த நிலையில் ஈரோடு அதிமுகவினர் அதிரடியாக எம்ஜிஆர் சிலையை சென்ற வருடம் கொண்டுவந்து நிறுவினார்கள். அதனைத்தொடர்ந்து கலைஞர் சிலையை இந்த மேடையில் வைக்க முறைப்படி மாவட்ட நிர்வாகத்திடம் திமுக மாவட்ட செயலாளர் முத்துச்சாமி அனுமதி கேட்டபோது, அதற்கு பதில் வராமல் இருந்தது. இந்த பின்னணியில் திடீரென சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை கொண்டு வந்து இந்த மேடையில் நிறுவினார்கள் ஈரோடு அதிமுகவினர். அப்போது எங்கள் தலைவர் கலைஞர் சிலையையும் இங்கு வைக்க அனுமதி வேண்டும் என திமுகவினர் போராட்டம் நடத்தியும் அனுமதி மறுக்கப்பட்டது.

former cm kalaignar karunanidhi statue erode


இந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர் திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி. அதிமுகவினர் ஜெயலலிதா சிலையை வைத்தாலும், அதை துணி போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். முறைப்படி திறப்புவிழா இன்னும் செய்யவில்லை இந்த சூழ்நிலையில் திடீரென ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலைஞர் சிலை பன்னீர்செல்வம் பூங்கா மேடையில் அமைக்க இன்று அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. 


இதனைத்தொடர்ந்து கட்சி மேலிடத்துக்கு தகவல் கூறினார். திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி அதன்பேரில் உடனடியாக சிலையைத் திறப்போம் என திமுக தலைமையும் கூற அனுமதி வந்த இரண்டே நாளில் அதாவது 22.09.19 ஞாயிற்றுக்கிழமை மாலை கலைஞர் சிலையை பன்னீர்செல்வம் பூங்கா மேடையில் முக ஸ்டாலின் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதிரடி திருப்பமாக திமுகவினர் அமைத்த மேடையில் ஜெயலலிதா சிலையை வைத்தும் அதிமுகவினர் திறப்பு விழா செய்யப்படாமலேயே இருக்க கலைஞர் சிலை 22 ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலினால் திறப்புவிழா செய்யப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.