Skip to main content

ஜெ.,வின் மாஜி டிரைவரின் மனைவிக்கு மிரட்டல்; கனகராஜின் அண்ணன் கைது!

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

 

former chief minister jayalalithaa former car driver brother police arrested



மர்மமான முறையில் இறந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் மனைவியை மிரட்டிய வழக்கில், அவருடைய மற்றொரு அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

 

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். 

 

ஜெ., மறைவை அடுத்து, அவருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின. இந்த அஸைன்மெண்டை முன்னின்று நடத்தியது, ஜெ.,யின் முன்னாள் கார் ஓட்டுநரும், எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையைப் பெற்றவருமான சமுத்திரம் கனகராஜ்தான் என சந்தேகிக்கப்பட்டது. 

 

அவர் மீது விசாரணை திரும்பிய நிலையில், கடந்த 28.4.2017ம் தேதி இரவு 08.30 மணியளவில், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி பிரிவு சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

 

உயிரிழந்த கனகராஜின் செல்போன் மற்றும் அவர் தொடர்புடைய சில ஆவண ஆதாரங்களை திட்டமிட்டு மறைத்து விட்டதாக அவருடைய உடன் பிறந்த அண்ணன் தனபால், சின்னம்மா மகன் ரமேஷ் ஆகியோரை கடந்த 2021- ஆம் ஆண்டு குன்னூர் காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர்கள் இருவரும் பிணையில் விடுதலை ஆகியுள்ளனர். 

 

இது ஒருபுறம் இருக்க, கனகராஜின் இரண்டாவது அண்ணன் பழனிவேல் (வயது 44), ஜலகண்டாபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கனகராஜின் மனைவி கலைவாணி (வயது 28). குழந்தைகளுடன் சென்னையில் வசிக்கிறார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் தன் கணவருக்கு சில சொத்துகள் உள்ளன. அவற்றை விற்பதற்காக கலைவாணி வந்திருந்தபோது, கனகராஜின் இரண்டாவது அண்ணன் பழனிவேல் அவரிடம் தகராறு செய்துள்ளார்.

 

''நீ கொடுத்த புகாரால்தான் என்னுடைய அண்ணன் தனபாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கு செலவுக்காக இதுவரை 4 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். நீ புகாரை வாபஸ் பெறாவிட்டால் இங்கிருந்து சென்னைக்கு செல்ல முடியாது,'' என மிரட்டியிருக்கிறார் பழனிவேல். அங்கிருந்து செல்ல முயன்றபோது, கலைவாணியின் உடைகளைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். 

 

இதனால் அரண்டு போன கலைவாணி, இதுகுறித்து ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பழனிவேல் மீது மிரட்டல் விடுத்தது, ஆபாச வார்த்தையால் திட்டியது, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜூன் 28ம் தேதி கைது செய்துள்ளனர். மேட்டூர் நீதிமன்றத்தில் பழனிவேலை ஆஜர்படுத்திய காவல்துறை, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

 

கலைவாணியை மிரட்டியதாகச் சொல்லப்படும் சம்பவம் ஜூன் 3- ஆம் தேதியே நடந்துள்ளது. ஆனால் பழனிவேல் மீது ஜூன் 27- ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு, மறுநாள் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

 

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''கலைவாணி, அளித்த புகாரின் பேரில் தான் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் அழுத்தம் ஏதுமில்லை,'' என்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.