Published on 12/05/2021 | Edited on 12/05/2021

சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன், கரோனா தொற்று காரணமாக சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று (12.05.2021) காலை அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 72. இவர் ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை அதிகாரி குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.