Skip to main content

ஓசூர் வனப்பகுதியை முகாமிட்டுள்ள 12 காட்டுயானைகள்!! வனத்துறை எச்சரிக்கை!!

Published on 28/10/2018 | Edited on 28/10/2018

ஓசூர் மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டு இருப்பதால் அப்பகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

forest

 

தளி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 12 காட்டு யானைகள் ஓசூர் தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் சானமாவு வனப்பகுதிகளில் பகுதிகளில் முகாமிட்டு உள்ளது. இதனால் சானமாவை சுற்றியுள்ள பகுதிகளான பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கள்,  உபேபாளையம், நாயகனப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ளும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்