Skip to main content

வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவில் விற்க முடிவு!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

ford car company plants closed including chennai plant employees

 

சென்னையில் இருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறும் நிலையில், அதே இடத்தில் வேறொரு நிறுவனத்தைக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ்நாடு அரசின் தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது. 

 

சென்னையை அடுத்த மறைமலைநகரில் அமைந்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ரூபாய் 5,161 கோடியை முதலீடு செய்து கார் உற்பத்தியை செய்துவரும் ஃபோர்டு நிறுவனம், கரோனா பரவல், வாகன விற்பனை சரிவு, விற்பனை செலவை விட உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது தொழிற்சாலைகளை மூடும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

இனி வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யவும், இங்குள்ள பழுது நீக்கும் மையங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவும் ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.  

 

மறைமலை நகரில் 400-க்கும் அதிகமான ஏக்கரில் செயல்படும் ஃபோர்டு நிறுவனம் மூடப்படும் நிலையில், அதனை ஏற்று நடத்துவது தொடர்பாக ஃபோர்டு நிறுவனம் மற்றும் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அப்படி எந்த நிறுவனமேனும் தொழிற்சாலையை ஏற்று நடத்த முன்வந்தால் சுமுகமாக முடிக்க தமிழ்நாடு அரசு மத்தியஸ்தம் செய்யும்.

 

எனினும், சோழிங்கநல்லூரில் செயல்பட்டுவரும் ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூடப்படவில்லை என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 

 

கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியேறும் ஐந்தாவது ஆட்டோமொபைல் நிறுவனம் ஃபோர்டு என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.