சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, படிக்க வேண்டும் என்று கூறியும்எட்டாம் வகுப்பு சிறுமிக்கு அவரது குடும்பத்தினர் கட்டாயதிருமணம் செய்வித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கட்டாய திருமணம் செய்துகொண்டலாரி ஓட்டுநர் கருப்பண்ணன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள சிறுமியின் தாய் செல்லம்மாள், சகோதரன் சிங்காரம் ஆகியோரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.