Skip to main content

உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை; உணவுப்பாதுகாப்புத்துறை சோதனையில் அம்பலம்!       

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Food Safety Department officials inspect Dharmapuri restaurants

 

தர்மபுரியில் உணவகங்களில் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சிகளைப் பயன்படுத்தியது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய  சோதனையில் தெரிய வந்துள்ளது.    

 

தர்மபுரி மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் குமணன்,  கந்தசாமி, நந்தகோபால் ஆகியோர் தர்மபுரி நகர, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நடுத்தர மற்றும் பெரிய உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.     இந்த சோதனையில், 6 உணவகங்களில் 25 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி சமைப்பதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.  

 

இதையடுத்து அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து, அழித்தனர். கெட்டுப்போன இறைச்சியை வைத்திருந்த உணவகங்களுக்கு அபராதம்  விதிக்கப்பட்டது.     தர்மபுரி பேருந்து நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையின்போது, உரிமம் பெறாமல் சில உணவகங்கள் செயல்பட்டு வருவது  தெரிய வந்தது. அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.  

 

இது தொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறுகையில், “உணவகங்களில் கெட்டுப்போன பழைய கோழி, ஆட்டிறைச்சிகளை  பயன்படுத்தக் கூடாது என எச்சரித்து உள்ளோம். பழைய இறைச்சியை பயன்படுத்தியதாக சில உணவகங்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது. சில கடைகளுக்கு முன்னறிவிப்பு அறிவிப்பு தரப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களும், உணவுப்பொருள் விற்பனை செய்வோரும் உணவுப்பாதுகாப்புத்துறை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் பொட்டலம் கட்டித்தரக்கூடாது” என்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.