Skip to main content

சமத்துவபுரம் போல கலைஞர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துத்தர வேண்டும்- நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை...

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திறமையான நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்களின் முதலாமாண்டு விழாவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

folk artists request for government help

 

 

திருவாரூரில் தனியார் மண்டபத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் முதலாமாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவாரூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரதா கலந்துகொண்டார். இதில் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நாட்டுப்புற பாரம்பரியமிக்க நிகழ்ச்சிகளான கரகாட்டம், தப்பாட்டம், காளி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அரங்கேற்றப்பட்டது. மேலும் நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கையான வீட்டுமனை பட்டா, நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் வைப்பதற்கான இடவசதி, மாவட்ட அளவில் வழங்கப்பட்டுவரும் விருதை அதிகப்படுத்த வேண்டும், திருவாரூர் மாவட்ட சிறப்புமிக்க திறமையான நாட்டுபுற கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு கலைமாமணி விருது தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகள் வைக்கப்பட்டது. 

அதற்கு முன்னதாக நலிவுற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவிதொகையை உயர்த்தி வழங்கிய தமிழகரசுக்கு நன்றியை தெரிவித்தனர்.

இது குறித்து  கலைத்தாய் அறக்கட்டளையின் நிறுவனர் கிங்பைசல் கூறுகையில்," இது போன்ற விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். நலிந்து வரும் கலைஞர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருப்பதுபோல தமிழகம் முழுவதும் நிறைய இருக்கிறார்கள் அவர்களையும் தமிழக அரசு இனம்கண்டு ஊக்கப்படுத்த வேண்டும். பாரம்பரியம் கொண்ட கலைகளுக்கும், கலைஞர்களுக்கும்  அரசு உதவி செய்து அழிவிலிருந்து மீட்க முன்வரவேண்டும். குறிப்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சாதிகளைக் அழித்தொழிக்க சமத்துவபுரம் கொண்டுவந்து மனிதத்தை உண்டாக்கினார் அதுபோல் ஒவ்வொரு தாலுகாவிலும் கலைஞர்களுக்கு என தனிக் குடியிருப்புகள் அமைத்து கொடுக்க முன்வர வேண்டும்." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.