இந்தியா முழுவதும்4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பண்டிகை காலத்தில் பூக்களின் வியாபாரம் பெரியதாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை பூக்கள் விலை அதிகரித்ததாலும் தொடர் மழையின் காரணமாகவும் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விற்பனையாகாமல் வீணானது. இதனால் சுமார் 50 டன் பூக்களைக் கோயம்பேடு மார்க்கெட் சுற்றிலும், வியாபாரிகள் குப்பைகளில் கொட்டினர்.