Skip to main content

குப்பைக்கு போகும் பூக்கள்... கொள்முதலை நிறுத்தும் வியாபாரிகள்... கண்ணீரில் விவசாயிகள்!!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020

கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்படத் தொடங்கிவிட்டனர். காய்கறி விவசாயிகள் தங்கள் காய்கறிகளை விற்க முடியவில்லை என்று குமுறினார்கள். பிறகு புதுக்கோட்டை மாவட்டம் தொடங்கி தமிழகம் முழுவதும் காய்கறிகளை தோட்டக்கலை அலுவலர்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு குறைந்த விலையிலாவது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மலர்கள்?

 

Flowers that go to the trash ... Merchants who stop buying ... Farmers in tears !!


மதுரை, திருச்சிக்கு அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்தான் மலர் சந்தைகளில் பெரியது. ஒரு நாளைக்கு சுமார் 15 முதல் 20 டன் மலர்கள் விற்பனை செய்யப்படும் சந்தை இது. மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி, ரோஜா, சம்பங்கி, செண்டி, வாடாமல்லி, அரளி என அத்தனை வகை மலர்களும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யும் இடமாக உள்ளது. ஆலங்குடிக்கு கிழக்கு வம்பன், திருவரங்குளம், மழையூர், செம்பட்டிவிடுதி தொடங்கி கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், மாங்காடு, வடகாடு, சேந்தன்குடி, நகரம், அணவயல், மேற்பனைக்காடு, நெய்வத்தளி என சுமார் 100 கிராமங்களில் பிரதான விவசாயங்களில் ஒன்று மலர்கள் உற்பத்தி. இவ்வளவு உற்பத்தி இருக்கும் இடத்தில் ஒரு நறுமணத் தொழிற்சாலை வேண்டும் என்று ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் வேட்பாளர்களிடம் கோரிக்கை வைப்பது, பிறகு ஏமாறுவதும் விவசாயிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.
 

 nakkheeran app


 

Flowers that go to the trash ... Merchants who stop buying ... Farmers in tears !!


தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் மலர்கள் தோட்டங்களிலேயே பறிக்கப்படாமல் மலர்ந்து கொட்டியது. கடந்த ஒரு வாரமாக சிறு, சிறு சில்லரை வியாபாரிகள் மூலம் வீட்டுக்கு வீடு விற்பனைக்காக கொஞ்சம், கொஞ்சம் மலர்களை விவசாயிகள் பறித்து வந்து கடைகளில் கொடுத்தனர். ஆனால் ஒவ்வொரு நாளும் வியாபாரிகள் வராததால் டன் கணக்கில் குப்பைக்கு போனது மலர்கள்.

விவசாயிகளின் மலர் உற்பத்தி செலவு தொகையை கொடுக்க முடியாது என்றாலும் மலர்கள் பறிக்கும் கூலி அளவுக்கு கமிசன் கடைகாரர்கள் பணம் கொடுத்தனர். ஆனால் அந்த தொகையையும்கூட தொடர்ந்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு வியாழக்கிழமை முதல் மலர்கள் கொள்முதலை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் கண்ணீரோடு நிற்கிறார்கள்.

 

Flowers that go to the trash ... Merchants who stop buying ... Farmers in tears !!


இது குறித்து விவசாயிகள் கூறும் போது, புயல் வந்து செடிகளை அழித்தது. இப்ப கரோனா வந்து மலர்களையும் மலர் விவசாயிகளையும் அழிக்கிறது. ஒரு மாதமாக மலர் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு கணக்கில் அடங்காது. மலர் விற்ற காசு தினசரி வீட்டு செலவினங்களுக்காகவும், குழந்தைகளின் படிப்பு செலவுக்கும் பயன்பட்டது, ஆனால் இப்போது ஒரு வழியும் இல்லை. பூக்களை பறிக்காமல் விட்டால் செடிகள் கெட்டுப் போய்விடும் என்பதால் அதற்கும் கூலி கொடுத்து பறித்து கீழே கொட்டுகிறோம். ஒரு வாரம் கமிசன் கடைகளில் கொஞ்சம் மலர்கள் வாங்கினார்கள். அவர்களும் அதை விற்க முடியாமல், குப்பையில் அள்ளிக் கொட்டுகிறார்கள். அவர்களிடம் வாங்கிய கடன்களையும் கட்ட முடியவில்லை. கமிசன் கடைகாரர்களும் எவ்வளவுதான் நட்டமடைவார்கள். அதனால் வியாழக்கிழமை முதல் மலர்கள் வாங்குவதை நிறுத்துவதாக கூறிவிட்டனர்.

தமிழக அரசு மலர் விவசாயிகளின் தோட்டங்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்கின்றனர். மணக்க வேண்டிய மலர் விவசாயிகளின் வாழ்க்கை கண்ணீரில் கரைகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.