ADVERTISEMENT

அயனாவரம் சிறுமி பாலியல் புகாரில் தப்பித்த ஐந்துபேர்!-திடுக்கிடவைக்கும் புதிய தகவல்கள்!  

05:21 PM Aug 09, 2018 | manosoundar

ADVERTISEMENT

ADVERTISEMENT

அயனாவரம் தனியார் அப்பார்ட்மெண்டில் 12 வயது சிறுமியை 17-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாய் கொடுத்த பகீர் புகார் தமிழகத்தையே அதிரவைத்தது. இதனைத்தொடர்ந்து, செக்யூரிட்டிகள், ப்ளம்பர்கள், எலெக்ட்ரிஷியன்கள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அப்பார்ட்மெண்ட் ஊழியர்கள் 17 பேரை அதிரடியாக கைது செய்தது காவல்துறை. ஆனால், இச்சம்பவத்தில் மிகவும் தொடர்புள்ள 5 பேர் தப்பவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பகீர் கிளப்புறார் விசாரணை அதிகாரி ஒருவர்.

இதுகுறித்து, அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களிடம் நாம் விசாரித்தபோது, “சம்பவம் நடந்த அப்பார்ட்மெண்டிற்கு அடிக்கடி மூன்று இளைஞர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமி வசித்த ’பி’ ப்ளாக்கிற்கு வந்து சென்றிருக்கிறார்கள். ஒருமுறை, யார் நீங்கள்? என்று அப்பார்ட்மெண்டிலுள்ள நிர்வாகிகள் கேட்டபோது, தான் ஒரு போலீஸ்க்காரரின் மகன் என்று சொன்னதோடு அப்பாவுக்கு ஃபோன் போட்டும் கொடுத்தான் அந்த இளைஞன். அப்போது, அந்த இளைஞனின் அப்பா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டு ஃபோனில் பேசியிருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி”என்றார்கள்.

மேலும், விசாரணை அதிகாரி நம்மிடம், “சிறுமியின் குடும்பம் காவல்துறையில் புகார் கொடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புகூட இரவு 1 மணிக்குமேல் அந்த மூன்று இளைஞர்களும் அப்பார்மெண்ட்டுக்கு வந்திருக்கிறார்கள். ‘பி’ ப்ளாக் மூன்றாவது மாடிக்கு சென்று பிறகு, அந்த மூன்று இளைஞர்களும் அப்படியே டி -பிளாக் எஸ்-லிஃப்ட் எனப்படும் சர்வீஸ் லிஃப்ட்டில் 10-வது மாடிக்கு சென்றிருக்கிறார்கள். இங்குதான், பங்சன் ஹால், யோகா, ஜிம் எல்லாம் உள்ளன. மேலும்,டி--பிளாக்கில்தான் 9-வது மாடியிலிருந்து 15-வது மாடி வரை பலவீடுகள் விற்காமல் காலியாக இருக்கின்றன. அங்கிருந்து, 15-வது மாடிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது, மொட்டைமாடி. எதற்காக அந்த நேரத்தில் அந்த இளைஞர்கள் அங்கு சென்றார்கள்? யாருடன் சென்றார்கள்? ப்ளாக்மெயில் செய்து யாரையாவது அழைத்து சென்றார்களா? என்கிற பல சந்தேகங்கள் வர, அதுகுறித்தும் தீவிரமாக விசாரித்துவருகிறோம்.

அந்த அபார்ட்மெண்டில் ஏ,பி,சி,டி என 15 மாடிகள் கொண்ட நான்கு ப்ளாக்குகள் உள்ளன. 1 ப்ளாக்கிற்கு 128 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், அவரவர்களும் தனித்தனியாக தங்களது பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களை பொறுத்திவைத்திருக்கிறார்கள். இந்த, சி.சி.டி.வி. கேமராக்களை கண்காணிப்பது அதற்கான ஆபரேட்டர் ரூம் சாவியானது செக்கியூரிட்டி மேனேஜர் சிவா, சூப்பர்வைஸர் பூபதி ஆகியோரின் கண்ட்ரோலில்தான் உள்ளது. சிறுமியின் தாய் புகாரில் குறிப்பிட்டதுபோல பாலியல் வன்புணர்வின்போது சி.சி.டி.வி. கேமராக்களை ஆஃப் செய்யவேண்டும் என்றால் சிவா, பூபதி இரண்டு பேரின் ஒப்புதல் இல்லாமல் வாய்ப்பே இல்லை. இவர்களைத்தாண்டி அந்த ரூமிற்கு வேறு யாரும் செல்லவும் முடியாது. அதற்கான, சாவி இவர்களிடம்தான் இருக்கும். ஆனால், இவர்கள் இரண்டு பேருடைய பெயரும் எஃப்.ஐ.ஆரில். சேர்க்கப்படவில்லை. இந்த அபார்ட்மெண்டில் இரண்டுவிதமான செக்கியூரிட்டி ஏஜென்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலும் யு.கே.எஃப்.எஸ். ஏஜென்சியின் செக்யூரிட்டிகளே அதிகமாக கைதாகியிருக்கிறார்கள்.

அதேபோல், 500 கிலோ வாட்ஸ் கொண்ட 2 ஜனரேட்டர்கள் உள்ளன. மேலும், இந்த அப்பார்ட்மெண்டுக்கு என தனி ட்ரான்ஸ்ஃபார்மரே உள்ளது. அதனால், கரண்ட் கட் ஆவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அப்படியே, கட் ஆனாலும் ஜனரேட்டர் மூலம் ஆட்டோமேட்டிக்காக கரண்ட் வந்துவிடும். ஒருவேளை, சி.சி.டி.வியை ஆஃப் செய்துவிட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்தால் ஆஃப் செய்வதற்கு முந்தைய வீடியோ பதிவுகள் இருக்குமல்லவா? 4 ப்ளாக் கொண்ட 500-க்குமேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் கண்காணித்துக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்டில் ஒரு கேமராவில்கூடவா அச்சிறுமியை அழைத்துசெல்லும் காட்சி பதிவாகவில்லை? ஏழுமாதங்களாக எப்படி கேமராவை ஆஃப் செய்தார்கள் என்ற கோணத்திலும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அப்பார்ட்மெண்டுக்கு சம்பந்தமில்லாத அந்த மூன்றுபேர் தங்களது குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள காவல்துறை அல்லது வேறு செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறார்களா? அல்லது அக்குடும்பத்தினரை வேறு விதத்தில் ப்ளாக் மெயில் செய்துகொண்டிருக்கிறார்களா? என்றும் தீவிர விசாரணை செய்துவருகிறோம். சிறுமி விவகாரத்தில் இன்னும் வேறு யார் யார் இருந்தாலும் கைது நிச்சயம்” என்கிறார் அதிரடியாக.

தமிழகத்தையே பதறவைத்த சிறுமியின் விவகாரத்தில் இன்னும் ஐந்துபேர் சிக்க இருக்கிறார்கள். அவர்களிடம், தீர விசாரித்தால்தான் இன்னும் அதிகாரபலத்தில் இருந்துகொண்டு தப்பித்தவர்கள் யார் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வரும். கடந்த, 15 நாட்களுக்கு முன் சி.சி.சி.டி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தாலே இன்னும் பலர் சிக்குவார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT