Skip to main content

அயனாவரம் சிறுமி பாலியல் புகாரில் தப்பித்த ஐந்துபேர்!-திடுக்கிடவைக்கும் புதிய தகவல்கள்!  

Published on 09/08/2018 | Edited on 27/08/2018

 

child rape

 

 

 

அயனாவரம் தனியார் அப்பார்ட்மெண்டில் 12 வயது சிறுமியை 17-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாய் கொடுத்த பகீர் புகார் தமிழகத்தையே அதிரவைத்தது. இதனைத்தொடர்ந்து, செக்யூரிட்டிகள், ப்ளம்பர்கள், எலெக்ட்ரிஷியன்கள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அப்பார்ட்மெண்ட் ஊழியர்கள் 17 பேரை அதிரடியாக கைது செய்தது காவல்துறை. ஆனால், இச்சம்பவத்தில் மிகவும் தொடர்புள்ள 5 பேர் தப்பவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பகீர் கிளப்புறார் விசாரணை அதிகாரி ஒருவர்.

 

இதுகுறித்து, அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களிடம் நாம் விசாரித்தபோது, “சம்பவம் நடந்த அப்பார்ட்மெண்டிற்கு அடிக்கடி மூன்று இளைஞர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமி வசித்த ’பி’ ப்ளாக்கிற்கு வந்து சென்றிருக்கிறார்கள். ஒருமுறை, யார் நீங்கள்? என்று அப்பார்ட்மெண்டிலுள்ள நிர்வாகிகள் கேட்டபோது, தான் ஒரு போலீஸ்க்காரரின் மகன் என்று சொன்னதோடு அப்பாவுக்கு ஃபோன் போட்டும் கொடுத்தான் அந்த இளைஞன். அப்போது, அந்த இளைஞனின் அப்பா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டு ஃபோனில் பேசியிருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி”என்றார்கள்.

 

மேலும், விசாரணை அதிகாரி நம்மிடம், “சிறுமியின் குடும்பம் காவல்துறையில் புகார் கொடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புகூட இரவு 1 மணிக்குமேல் அந்த மூன்று இளைஞர்களும் அப்பார்மெண்ட்டுக்கு வந்திருக்கிறார்கள்.  ‘பி’ ப்ளாக் மூன்றாவது மாடிக்கு சென்று பிறகு, அந்த மூன்று இளைஞர்களும் அப்படியே டி -பிளாக் எஸ்-லிஃப்ட் எனப்படும் சர்வீஸ் லிஃப்ட்டில் 10-வது மாடிக்கு சென்றிருக்கிறார்கள். இங்குதான், பங்சன் ஹால், யோகா, ஜிம் எல்லாம் உள்ளன. மேலும்,டி--பிளாக்கில்தான் 9-வது மாடியிலிருந்து 15-வது மாடி வரை பலவீடுகள் விற்காமல் காலியாக இருக்கின்றன. அங்கிருந்து, 15-வது மாடிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது, மொட்டைமாடி. எதற்காக அந்த நேரத்தில் அந்த இளைஞர்கள் அங்கு சென்றார்கள்? யாருடன் சென்றார்கள்? ப்ளாக்மெயில் செய்து யாரையாவது அழைத்து சென்றார்களா? என்கிற பல சந்தேகங்கள் வர, அதுகுறித்தும் தீவிரமாக விசாரித்துவருகிறோம்.

 

 

 

அந்த அபார்ட்மெண்டில் ஏ,பி,சி,டி என 15 மாடிகள் கொண்ட நான்கு ப்ளாக்குகள் உள்ளன.  1 ப்ளாக்கிற்கு 128 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், அவரவர்களும் தனித்தனியாக தங்களது பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களை பொறுத்திவைத்திருக்கிறார்கள். இந்த, சி.சி.டி.வி. கேமராக்களை கண்காணிப்பது அதற்கான ஆபரேட்டர் ரூம் சாவியானது செக்கியூரிட்டி மேனேஜர் சிவா, சூப்பர்வைஸர் பூபதி ஆகியோரின் கண்ட்ரோலில்தான் உள்ளது. சிறுமியின் தாய் புகாரில் குறிப்பிட்டதுபோல பாலியல் வன்புணர்வின்போது சி.சி.டி.வி. கேமராக்களை ஆஃப் செய்யவேண்டும் என்றால் சிவா, பூபதி இரண்டு பேரின் ஒப்புதல் இல்லாமல் வாய்ப்பே இல்லை. இவர்களைத்தாண்டி அந்த ரூமிற்கு வேறு யாரும் செல்லவும் முடியாது. அதற்கான, சாவி இவர்களிடம்தான் இருக்கும். ஆனால், இவர்கள் இரண்டு பேருடைய பெயரும் எஃப்.ஐ.ஆரில். சேர்க்கப்படவில்லை.  இந்த அபார்ட்மெண்டில் இரண்டுவிதமான செக்கியூரிட்டி ஏஜென்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலும் யு.கே.எஃப்.எஸ். ஏஜென்சியின் செக்யூரிட்டிகளே அதிகமாக கைதாகியிருக்கிறார்கள்.

 

 

 

அதேபோல், 500 கிலோ வாட்ஸ் கொண்ட 2 ஜனரேட்டர்கள் உள்ளன. மேலும், இந்த அப்பார்ட்மெண்டுக்கு என தனி ட்ரான்ஸ்ஃபார்மரே உள்ளது. அதனால், கரண்ட் கட் ஆவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அப்படியே, கட் ஆனாலும் ஜனரேட்டர் மூலம் ஆட்டோமேட்டிக்காக கரண்ட் வந்துவிடும். ஒருவேளை, சி.சி.டி.வியை ஆஃப் செய்துவிட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்தால் ஆஃப் செய்வதற்கு முந்தைய வீடியோ பதிவுகள் இருக்குமல்லவா?  4 ப்ளாக் கொண்ட 500-க்குமேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் கண்காணித்துக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்டில் ஒரு கேமராவில்கூடவா அச்சிறுமியை அழைத்துசெல்லும் காட்சி பதிவாகவில்லை? ஏழுமாதங்களாக எப்படி கேமராவை ஆஃப் செய்தார்கள் என்ற கோணத்திலும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அப்பார்ட்மெண்டுக்கு சம்பந்தமில்லாத அந்த மூன்றுபேர் தங்களது குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள காவல்துறை அல்லது வேறு செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறார்களா? அல்லது அக்குடும்பத்தினரை வேறு விதத்தில் ப்ளாக் மெயில் செய்துகொண்டிருக்கிறார்களா? என்றும் தீவிர விசாரணை செய்துவருகிறோம். சிறுமி விவகாரத்தில் இன்னும் வேறு யார் யார் இருந்தாலும் கைது நிச்சயம்” என்கிறார் அதிரடியாக.

 

தமிழகத்தையே பதறவைத்த சிறுமியின் விவகாரத்தில் இன்னும் ஐந்துபேர் சிக்க இருக்கிறார்கள். அவர்களிடம், தீர விசாரித்தால்தான் இன்னும் அதிகாரபலத்தில் இருந்துகொண்டு தப்பித்தவர்கள் யார் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வரும். கடந்த, 15 நாட்களுக்கு முன் சி.சி.சி.டி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தாலே இன்னும் பலர் சிக்குவார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.