Skip to main content

அயனாவரம் சிறுமி பாலியல் புகாரில் தப்பித்த ஐந்துபேர்!-திடுக்கிடவைக்கும் புதிய தகவல்கள்!  

Published on 09/08/2018 | Edited on 27/08/2018

 

child rape

 

 

 

அயனாவரம் தனியார் அப்பார்ட்மெண்டில் 12 வயது சிறுமியை 17-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாய் கொடுத்த பகீர் புகார் தமிழகத்தையே அதிரவைத்தது. இதனைத்தொடர்ந்து, செக்யூரிட்டிகள், ப்ளம்பர்கள், எலெக்ட்ரிஷியன்கள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அப்பார்ட்மெண்ட் ஊழியர்கள் 17 பேரை அதிரடியாக கைது செய்தது காவல்துறை. ஆனால், இச்சம்பவத்தில் மிகவும் தொடர்புள்ள 5 பேர் தப்பவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பகீர் கிளப்புறார் விசாரணை அதிகாரி ஒருவர்.

 

இதுகுறித்து, அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களிடம் நாம் விசாரித்தபோது, “சம்பவம் நடந்த அப்பார்ட்மெண்டிற்கு அடிக்கடி மூன்று இளைஞர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமி வசித்த ’பி’ ப்ளாக்கிற்கு வந்து சென்றிருக்கிறார்கள். ஒருமுறை, யார் நீங்கள்? என்று அப்பார்ட்மெண்டிலுள்ள நிர்வாகிகள் கேட்டபோது, தான் ஒரு போலீஸ்க்காரரின் மகன் என்று சொன்னதோடு அப்பாவுக்கு ஃபோன் போட்டும் கொடுத்தான் அந்த இளைஞன். அப்போது, அந்த இளைஞனின் அப்பா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டு ஃபோனில் பேசியிருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி”என்றார்கள்.

 

மேலும், விசாரணை அதிகாரி நம்மிடம், “சிறுமியின் குடும்பம் காவல்துறையில் புகார் கொடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புகூட இரவு 1 மணிக்குமேல் அந்த மூன்று இளைஞர்களும் அப்பார்மெண்ட்டுக்கு வந்திருக்கிறார்கள்.  ‘பி’ ப்ளாக் மூன்றாவது மாடிக்கு சென்று பிறகு, அந்த மூன்று இளைஞர்களும் அப்படியே டி -பிளாக் எஸ்-லிஃப்ட் எனப்படும் சர்வீஸ் லிஃப்ட்டில் 10-வது மாடிக்கு சென்றிருக்கிறார்கள். இங்குதான், பங்சன் ஹால், யோகா, ஜிம் எல்லாம் உள்ளன. மேலும்,டி--பிளாக்கில்தான் 9-வது மாடியிலிருந்து 15-வது மாடி வரை பலவீடுகள் விற்காமல் காலியாக இருக்கின்றன. அங்கிருந்து, 15-வது மாடிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது, மொட்டைமாடி. எதற்காக அந்த நேரத்தில் அந்த இளைஞர்கள் அங்கு சென்றார்கள்? யாருடன் சென்றார்கள்? ப்ளாக்மெயில் செய்து யாரையாவது அழைத்து சென்றார்களா? என்கிற பல சந்தேகங்கள் வர, அதுகுறித்தும் தீவிரமாக விசாரித்துவருகிறோம்.

 

 

 

அந்த அபார்ட்மெண்டில் ஏ,பி,சி,டி என 15 மாடிகள் கொண்ட நான்கு ப்ளாக்குகள் உள்ளன.  1 ப்ளாக்கிற்கு 128 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், அவரவர்களும் தனித்தனியாக தங்களது பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களை பொறுத்திவைத்திருக்கிறார்கள். இந்த, சி.சி.டி.வி. கேமராக்களை கண்காணிப்பது அதற்கான ஆபரேட்டர் ரூம் சாவியானது செக்கியூரிட்டி மேனேஜர் சிவா, சூப்பர்வைஸர் பூபதி ஆகியோரின் கண்ட்ரோலில்தான் உள்ளது. சிறுமியின் தாய் புகாரில் குறிப்பிட்டதுபோல பாலியல் வன்புணர்வின்போது சி.சி.டி.வி. கேமராக்களை ஆஃப் செய்யவேண்டும் என்றால் சிவா, பூபதி இரண்டு பேரின் ஒப்புதல் இல்லாமல் வாய்ப்பே இல்லை. இவர்களைத்தாண்டி அந்த ரூமிற்கு வேறு யாரும் செல்லவும் முடியாது. அதற்கான, சாவி இவர்களிடம்தான் இருக்கும். ஆனால், இவர்கள் இரண்டு பேருடைய பெயரும் எஃப்.ஐ.ஆரில். சேர்க்கப்படவில்லை.  இந்த அபார்ட்மெண்டில் இரண்டுவிதமான செக்கியூரிட்டி ஏஜென்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலும் யு.கே.எஃப்.எஸ். ஏஜென்சியின் செக்யூரிட்டிகளே அதிகமாக கைதாகியிருக்கிறார்கள்.

 

 

 

அதேபோல், 500 கிலோ வாட்ஸ் கொண்ட 2 ஜனரேட்டர்கள் உள்ளன. மேலும், இந்த அப்பார்ட்மெண்டுக்கு என தனி ட்ரான்ஸ்ஃபார்மரே உள்ளது. அதனால், கரண்ட் கட் ஆவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அப்படியே, கட் ஆனாலும் ஜனரேட்டர் மூலம் ஆட்டோமேட்டிக்காக கரண்ட் வந்துவிடும். ஒருவேளை, சி.சி.டி.வியை ஆஃப் செய்துவிட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்தால் ஆஃப் செய்வதற்கு முந்தைய வீடியோ பதிவுகள் இருக்குமல்லவா?  4 ப்ளாக் கொண்ட 500-க்குமேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் கண்காணித்துக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்டில் ஒரு கேமராவில்கூடவா அச்சிறுமியை அழைத்துசெல்லும் காட்சி பதிவாகவில்லை? ஏழுமாதங்களாக எப்படி கேமராவை ஆஃப் செய்தார்கள் என்ற கோணத்திலும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். அப்பார்ட்மெண்டுக்கு சம்பந்தமில்லாத அந்த மூன்றுபேர் தங்களது குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள காவல்துறை அல்லது வேறு செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறார்களா? அல்லது அக்குடும்பத்தினரை வேறு விதத்தில் ப்ளாக் மெயில் செய்துகொண்டிருக்கிறார்களா? என்றும் தீவிர விசாரணை செய்துவருகிறோம். சிறுமி விவகாரத்தில் இன்னும் வேறு யார் யார் இருந்தாலும் கைது நிச்சயம்” என்கிறார் அதிரடியாக.

 

தமிழகத்தையே பதறவைத்த சிறுமியின் விவகாரத்தில் இன்னும் ஐந்துபேர் சிக்க இருக்கிறார்கள். அவர்களிடம், தீர விசாரித்தால்தான் இன்னும் அதிகாரபலத்தில் இருந்துகொண்டு தப்பித்தவர்கள் யார் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வரும். கடந்த, 15 நாட்களுக்கு முன் சி.சி.சி.டி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தாலே இன்னும் பலர் சிக்குவார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.