Skip to main content

பிச்சாவரம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

Published on 11/05/2018 | Edited on 11/05/2018
pichavaram


 

கிள்ளை பகுதியை சார்ந்த மீனவர் அன்புச்செல்வன் வியாழன் அன்று மீன் பிடிக்க பிச்சாவரம் பகுதிக்கு சென்றுள்ளார். அவரை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதாக கூறி கிள்ளை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 

இரவு வரை கணவனை கானாமல் தேடிய அவரது மனைவி காந்திமதி  தகவல் அறிந்து கணவரை பார்க்க  இரவு 11 மணிக்கு வனச்சரக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது அவரிடமும் வனத்துறையினர் மிரட்டல் தோனியில் பேசி கையெழுத்து போட சொன்னதாக கூறப்படுகிறது.

 

 இதனையறிந்த அந்த பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் திமுக தலைமைக்குழு உறுப்பினர் கிள்ளைரவிந்திரன் தலைமையில் வெள்ளியன்று வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

  பின்னர் மாவட்ட வனஅலுவலர் உத்திரவின் பேரில் சம்பந்தபட்ட மீனவரிடம் அபராததொகை வசுலிக்கப்பட்டு விடுவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பாக இருந்தது.

 

இதுகுறித்து கிள்ளைரவிந்திரன் கூறுகையில் அவர் மீன்பிடிக்கவே சென்றார். சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அவரிடம் அபராததொகை வசூலித்து விடுவித்து இருக்கலாம். அல்லது காவல்துறையிடம் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்து இருக்கலாம். இரவு முழுவதும் வனத்துறை அலுவலகத்தில் கைதிபோல் வைத்து இருப்பது சட்டபடி குற்றமாகும் என்றார்.

 

இதுகுறித்து மாவட்ட வனஅதிகாரி ராஜேந்திரன் கூறுகையில் மீனவர் அன்புசெல்வன் பிச்சாவரம் சுற்றுலா தளத்திற்கு அனுமதியில்லாமல் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிசென்று பணம் வசூலித்து வந்துள்ளார்.

 

இதற்கு முன் இதே குற்றத்திற்காக ரூ 5 ஆயிரம் வனத்துறையிடம் அபராதம் கட்டியுள்ளார். இந்தநிலையில் வியாழக்கிழமை கும்பகோனத்தை சேர்ந்தவர்கள் 9 பேரை இவரது படகில் அழைத்து கொண்டு படகு சவாரி செய்துள்ளார்.

 

இதுகுறித்து சுற்றுலாதுறை படகு ஓட்டுனர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவரை பிடித்து கைது செய்துள்ளோம். படகில் சாவாரி செய்தவர்களுக்கு தலா ரூ100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை வனத்துறையினர் கைது செய்தால் 24 மணி நேரம் வனத்துறை காவலில் வைக்க. சட்டத்தில் இடம் உள்ளது. அவரது மனைவி குறித்து கூறும் தகவல் முற்றிலும் தவறானது. அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கேட்டுகொண்டதின் பேரில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடகூடாது என்று எச்சரித்து ரூ2 ஆயிரம் மட்டும் அபராதம் வசூலித்து அவரையும் படகையும் விடுவித்துள்ளோம் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை; அச்சத்தில் கிராம மக்கள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
A wild elephant entered the town; Villagers in fear

கோவையில் வேடப்பட்டியில் திடீரென காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்துள்ள வேடப்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் முகாமிட்டு பெரும் அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கரடிமடை பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பேரூர் வேடப்பட்டி சாலை வழியாக ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. சுமார் 20 கிலோமீட்டர் வனப்பகுதியில் இருந்து கடந்து வந்துள்ள காட்டு யானை தனியார் கல்லூரியின் பின்புறத்தில் முகாமிட்டுள்ளது.

காட்டு யானையை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த கோவை வனச்சரக வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை சுற்றி வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைக் காட்டுயானை ஊருக்குள் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.