Skip to main content

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழகம், புதுவை படகுகள் விடுவிப்பு! நஷ்ட ஈடு கேட்டு மீனவர்கள் கோரிக்கை! 

Published on 27/07/2018 | Edited on 27/07/2018


 

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள தமிழகம் மற்றும் புதுவையைச் சோந்த படகுகள் அனைத்தையும் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளமைக்கு மீனவர்கள் வரவேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இலங்கை படகுத்தளத்தில் ஏறக்குறைய நான்கு வருடமாக கேட்பாரற்று கிடந்த, முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு நஷ்ட ஈடு வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

 

 

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட வலை பயன்படுத்தி  மீன்பிடிப்பில் ஈடுபட்டு கடல்வளங்களையும் மீன்வளத்தையும் அழித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த 2015 ஆம் ஆண்டு மே 10ந் தேதி முதல 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சிறைபிடிக்கப்பட்ட  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, காரைக்கால் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 174 படகுகளை விடுவிக்க அந்நாட்டு சட்டத்துறை அதிகாரிகள் உத்திரவிட்டது. 
 

இதனையடுத்து 168 தமிழக விசைபடகுகள் விடுவிக்கப்பட்டு இலங்கை வெளி விவகாரத்துறை அமைச்சத்திடம் ஒப்படைக்கட்டது மேலும் திருகோணமலை மற்றும் புத்தலம் பகுதியில் உள்ள படகுகள் அனைத்தையும் வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்க வேண்டும் என இலங்கை சட்டத்துறை உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

 

    இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்ய மீனவ குழு யாழ்பாணம் சென்ற மீனவ குழு படகுகளை ஆய்வு செய்ததில் 20 முதல் 30 படகுகள் மட்டுமே  திருப்பி எடுக்கும் நிலையில் உள்ளதாக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துவுள்ள நிலையில், முற்றிலும் சேதமடைந்த படகுளின் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.