sikali

சுருக்குமடிவலை பயன்பாட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மீனவர்கள் போராடிவரும் நிலையில் அவ்வப்போது இதுதொடர்பான மோதல் நிகழ்வுகளும் நடைபெற்றுவருகிறது.

Advertisment

சீர்காழி அருகே கடலில் மீனவர்கள் மோதிக்கொண்ட நிலையில், மோதலில் ஈடுபட்ட மீனவர்கள் பயன்படுத்திய சுருக்குமடி வலைகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். திருமுல்லைவாசலில்மீனவர்கள் பிரச்சனைக்குக் காரணமாக இருந்த விசைப்படகையும்போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் மீனவ கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால்அங்கு பதற்றம் நிலவிவருகிறது.