Skip to main content

மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தனர்!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

fishermans chennai airport minister jayakumar

 

 

காணாமல் போய் மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்கள் 8 பேர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 

 

சென்னை துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆகஸ்ட் 7- ஆம் தேதி காணாமல் போனார்கள். மீனவர்கள் பாபுவை தவிர மற்ற 8 பேர் மியான்மரில் தஞ்சம் அடைந்ததை அறிந்து அவர்களை மீட்டு வந்தது தமிழக அரசு.

 

டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த மீனவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் அமைச்சர் ஜெயக்குமார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், மீனவர் பாபுவை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்