Skip to main content

ஐந்து நாட்களாக கடலில் மிதந்த குடிசையில் மீனவர் தியானம்; நாகை பரபரப்பு

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை படகுத்துறை கடற்கரைப்பகுதில் 200 மீட்டர் தொலைவில் ஒரு குடிசை மிதப்பது சாகர் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்பு போலீசாரின் கண்ணில் பட்டது.

மிதப்பது என்ன என்பதை கண்டுபிடிக்க அங்கு சென்றது கடலோர காவல்படை, அந்த மிதவைக்கு அருகில் சென்று சோதித்ததில்,பிளாஸ்டிக் பேரல்களை அடுக்காக கட்டப்பட்டு அதன் மேல் மூங்கில் மற்றும் தென்னங்கீற்றுகளால் கூரைவீடுபோல் குடில் போல் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மிதவைக்குடிலுக்குள் சென்ற போலீசார் அதன் உள்ளே சென்று பார்த்தபோது அதில் ஒருவர் தன்னந்தனியாக அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

 

Fisherman meditating in a hut floating in the sea for the fifth day; The nagAI sensation

 

தியானத்தில் இருந்தவரைப்போல் இருந்தவரை எழுப்பிய போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

பிறகு என்ன நடந்தது போலீஸாரிடமமே விசாரித்தோம், "படகில் இருந்தவர் நாகூரை அடுத்துள்ள பட்டினச்சேரி மீனவர் கிராமத்தைச்சேர்ந்த கலியபெருமாள் 65 வயது இருக்கும். அவர் கடந்த 4 நாட்களாக இந்த மிதவையில் அமர்ந்து மன அமைதிக்காகவும், மீனவர் நலனுக்காகவும், தியானம் செய்வதாக கூறுகிறார். அவரை உடனடியாக கரைக்கு திரும்ப சொன்னோம் ஆனால் அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். ஐந்தாவது நாளாக கடலிலேயே தியானம் செய்து வருகிறார். தியானம் செய்ய அவருக்கு கடலில் மிதவைக்குடில் அமைத்துக் கொடுத்தது யார், அவர் எதற்காக இந்த தியானம் மேற்கொள்கிறார். அவர் சொல்லும் காரணம் உண்மையா, அல்லது அன்னிய தொடர்புக்காக உதவுகிறாரா, கடத்தலுக்காக இதை செய்கிறாரா என பல்வேறு கோணத்தில் விசாரித்துவருகின்றோம்." என்கிறார்.

 

Fisherman meditating in a hut floating in the sea for the fifth day; The nagAI sensation

 

மீனவர் ஒருவர் கூறுகையில், " அவர் வீட்டில் ஏதாவது பிரச்சனையாககூட இருக்கும், மீனவர்களுக்கு கடல்தாயை தவிர பெரிய உறவு இருக்காது. அதனால் இப்படி செய்திருக்கனும், இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் நான்கு நாட்களாக ஒரு குடில் கடலில் மிதக்கிறது, அதுகூட தெரியாத நிலையில் கடலோர காவல் இருப்பது தான் வேதனை, இதையே கண்டுபிடிக்காதவர்கள் கடத்தல்களை எப்படி கண்டுபிடித்து தடுப்பாங்க," என்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.