Skip to main content

ராமேஸ்வரம் குந்து காலில் 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் - மீனவர்களிடம் ஆலோசனை

Published on 16/04/2018 | Edited on 16/04/2018

 

rameswaram

 

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலுள்ளகுந்துகாலில் ரூபாய் 70 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்குதளத்தை ஒன்றரை வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தமிழக மீன்வளத்துறையின் முதன்மைசெயலாளர் கோபால் தெரிவித்தார்.

 

இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் இருந்து பாக்ஜலசந்தி  கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது  இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது, இது போன்ற சம்பவங்கள்  இன்றல்ல நேற்றல்ல கடந்த 30 வருடங்களாகவே இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் சந்தித்து வரும் மிக பெரிய பிரச்சனை.

 

மேலும் மீனவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக மீனவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமே போராட்டக்களமாக மாறிவருவது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது.

 

இந்நிலையில் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது தான் 'ஆழ்கடல் மீன்பிடிப்பு" என்ற திட்டம்.

 

'ஆழ்கடல் மீன் பிடிப்பு" திட்டமானது மன்னார் வளைகுடா கடற் பகுதிக்குள் சென்று ஆழமான பகுதிக்குச் சென்று மீன்களை பிடிப்பதற்கான திட்டம். இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்  இராமேஸ்வரத்தை அடுத்துள்ள குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்க மத்திய, மாநில அரசு சுமார் 70 கோடி நிதி ஒதுக்கியது. 

 

இந்நிலையில் இன்று வெளியுறவுத்துறை இணை செயலாளர்  சஞ்சய் பாண்டா, பிரதமர் அலுவலக இணை செயலாளர் ப்ரிந்த்ரா நவனிக் மற்றும்   கால்நடை பராமரிப்பு மற்றும்   மீன்வளத்துறை இணை செயலாளர்  ராஜேஸ், தமிழக மீன்வளத்துறையின் முதன்மை செயலாளர் கோபால்  ஆகியோர்கள்  குந்துகாலில் இறங்குதளம்  அமைப்பது தொடர்பாக மீனவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தனர்.

 

பின்னர் மீன் இறங்குதளம் அமைய யுள்ள இடத்தை ஆய்வு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறையின் முதன்மைசெயலாளர் கோபால் : குந்துகாலில் சுமார் 70கோடி மதிப்பில் கட்டப்படும் மீன்பிடி இறங்குதளம் ஒன்றரை ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டு மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் இதற்கான ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க கூடிய படகுகள் கொச்சியில் தயார் செய்யப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக கட்டப்பட்டு வரும் படகுகள் இங்கு கொண்டு வரப்பட்டு உரிய பயனாளிகளிடம் வழங்கப்படும். பின் இரண்டாம் கட்டமாக  கட்டப்படும் படகுகள் தேர்வு செய்யப்பட்ட மீனவர்களிடம் வழங்கப்படும், தற்போது பெயர் பதிவு செய்த மீனவர்களுக்கு மட்டும்  படகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது, மேலும் மூக்கையூரில் கட்டப்பட்டு வரும் மீன்பிடிதுறைமுகம் பணிகள் அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில்  முடிவடையும்   என அவர் தெரிவித்தார்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.