Skip to main content

மீனவ பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை... ராமநாதபுரத்தில் பரபரப்பு!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

fisher women incident in ramanathapuram

 

ராமநாதபுரம் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடல்பாசி எடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை காலை வீட்டை விட்டு சென்ற நிலையில் மாலை வரை ரேணுகா வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வடகாடு காட்டுப்பகுதியில் அரை நிர்வாண  நிலையில் ரேணுகாவை எரிந்த நிலையில் சடலமாக மீட்டனர்.  அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அதேபகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்த்துவரும் வடமாநில இளைஞர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

fisher women incident in ramanathapuram

 

 

அதில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதோடு தீவைத்தனர். அந்த 6 வடமாநில இளைஞர்களையும் பொதுமக்கள் தாக்கினர். இந்த சம்பவத்தில் கொலையான ரேணுகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்ப போலீசார் முற்பட்ட போது முதலில் கொலையாளிகள் மீது  நடவடிக்கை எடுங்கள் என அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தாக்குதலுக்கு உள்ளான ஆறு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் ரேணுகாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அடையாளம் தெரியாமல் இருக்க அவரது உடலை எரித்ததும் தெரியவந்தது.

 

fisher women incident in ramanathapuram

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வடகாடு பகுதிகளில் இயங்கி வரும் இறால் பண்ணைகளை மூட வலியுறுத்தி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இறால் பண்ணைக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். மீனவ கிராம பெண் வடமாநில இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.