சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு கழகத்தில் இன்று(27.02.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபலா மற்றும் மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளை இறாலின் மரபணு மேம்பாட்டு திட்டம், மீன் நோய்களுக்கான தேசிய கண்காணிப்பு திட்டம் மற்றும் மீன்வளம்மற்றும் மரபுசார் மீன் உற்பத்தி குறித்த தேசிய கருத்தரங்கு ஆகியவற்றை தொடங்கி வைத்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள அரங்குகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

Advertisment