Skip to main content

மீன் வளர்ச்சி கழக டீசல் பங்குக்கு பூட்டு! நாகை மீனவர்கள் தவிப்பு !

Published on 04/07/2018 | Edited on 05/07/2018
dieseal

 

நாகையில் உள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக டீசல் விற்பனை நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்டதால் 3 வது நாளாக 450 விசைப்படகுகள் டீசல் நிரப்ப முடியாமல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், ஒரே நாளில்  43 லட்சம் ரூபாய் மானியத்தொகை மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

மீன் பிடி தடைகாலம் முடிந்து கடந்த 14 ம் தேதி நாகை மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் கடல் நீரின் வெள்ளம்பார்த்து இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் 340 விசைப்படகுகள் தடை காலம் முடியும் முன்னர் மீன்பிடிக்க சென்றதாக கூறி நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூரை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு, மீன்வளத்துறை அபராதம் விதித்து திடீர் என நோட்டீஸ் அனுப்பியது. 

 

மேலும் 340 விசைப்படகுகளுக்கும் அரசால் வழங்கப்படும் மானிய டீசலையும் வழங்காமல் நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் 340 விசைப்படகுகளுக்கு தேவையான மானிய டீசல் கிடைக்காததால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் நாகை மீனவர்கள் படகுகளை துறைமுகத்தில் நிறுத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

இந்த விவகாரத்தில் ஆவேசமடைந்த நாகை மீனவர்கள் இரு தினங்களுக்கு முன் கீச்சாங்குப்பம் துறைமுகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக டீசல் விற்பனை நிலையத்தை இழுத்து மூடி பூட்டு போட்டனர். இதனால் அங்கு வழங்கம் போல் டீசல் இறக்க வந்த டேங்கர் லாரிகள் எண்ணெய்யை இறக்க முடியாமல் திரும்பி சென்றதுடன் மற்ற விசைப்படகுகளுக்கு தேவையான டீசலை நிரப்ப முடியாத நிலையும் ஏற்பட்டது. 

 

இதனிடையே டீசல் விற்பனை நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்டதால் 2 வது நாளாக 450 விசைப்படகுகளுக்கு டீசல் நிரப்ப முடியாமல் மீனவர்கள் அங்கு தவித்து வருகின்றனர். மேலும் 340  விசைப்படகுகளுக்கு 30 ம் தேதி வழங்க வேண்டிய டீசல் வழங்காததால் ஒரே நாளில்  43 லட்சம் ரூபாய் மானியத்தொகை மீனவர்களுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளது. 

 

அரசுக்கும், மீனவர்களுக்கும் உள்ள உறவை மீன்வளத் துறை அதிகாரிகள் துண்டிக்க நினைப்பதாக குற்றம் சாட்டும் நாகை மீனவர்கள், மானிய டீசல் விவகாரத்தில் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மானியத் தொகையை வழங்குவதுடன், இப்பிரச்சனைக்கு தமிழக அரசு சுமூக தீர்வு எட்ட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் பயங்கர தீ விபத்து!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Coimbatore Corporation Vellalur fire incident

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல லட்சக்கணக்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் நேற்று மாலை திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அதே சமயம் ஹிட்டாட்சி மற்றும் பொக்லைன் வாகனங்கள் மூலம் குப்பைகள் நகர்த்தப்பட்டும் மற்ற இடங்களுக்கும் தீ பரவாமலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரண்டு டிரோன்கள் மூலம் தீப்பற்றி எரியும் இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. 

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார்.