கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் அலுவல்ஆய்வு கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கேள்விக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அதேபோல் நாகை மாலி கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.