Skip to main content

‘போடுங்கம்மா ஓட்டு!’- வேஷத்துக்கு ஏற்ப கோஷம்!

Published on 25/12/2019 | Edited on 25/12/2019

தன் கால்களைத் தானே அமுக்கிவிட்டபடி, யார் வீட்டு வாசலிலோ மூச்சுவாங்கியபடி உட்கார்ந்த முருகலட்சுமி “நடந்து நடந்து காலெல்லாம் வலிக்குது..”என்றார், சிவகாசி ஒன்றியம்- பள்ளபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அந்த வேட்பாளர் பின்னால், வீடு வீடாக வாக்கு சேகரிப்பதற்காக அணி வகுத்து வந்த கூட்டத்தில் ஒருவர்தான் அவர். 
 

யாரோ ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக, பிரச்சாரத்தின்போது அவரைப் பின்தொடரும்  முருகலட்சுமி போன்றவர்கள்,  வீடு வீடாகப் போய், “அக்கா.. இது நம்ம சின்னம்.. இவரு நம்ம வேட்பாளர்.. மறக்காம ஓட்டு போட்ருங்க..”என்று ஏன் கெஞ்ச வேண்டும்?  

first phase local body election virudhunagar election campaign


ஏழ்மை நிலைதான்! எல்லாம் வயிற்றுப்பாட்டுக்காகத்தான்! ஏதோ ஒரு சின்னத்தின் பதாதையைக் கையில் ஏந்தி, வாக்கு கேட்டு குரல் எழுப்பி, அந்தப் பஞ்சாயத்து ஏரியா முழுவதும் நடந்தே செல்வதை ஒருவித உழைப்பாகவே செய்து வருகிறார்கள். இவர்கள். ஆம். அதற்கான கூலியைத் தந்துவிடுகிறார் அந்த வேட்பாளர். அதே நேரத்தில், குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு மட்டுமே உழைப்பது என்ற குறுகிய வட்டத்தில் இவர்கள் சிக்குவதில்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்த வேட்பாளராக இருந்தாலும், முன்கூட்டியே நேரத்தை நிர்ணயம் செய்துகொண்டு, குறிப்பிட்ட நேரத்தில், வேட்பாளர் வீட்டில் ஆஜராகிவிடுவார்கள்.

ஒரு நாளில் குறைந்தபட்சம் 5 வேட்பாளர்களிடமிருந்தாவது இவர்களுக்கு அழைப்பு வரும். அந்த 2 மணி நேர உழைப்புக்கு ரூ.200 வரை கிடைக்கிறது. இந்தத் தேர்தல் உழைப்பு ஒரு சிலருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 வரை கிடைப்பதற்கு வழி செய்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், சிறுவர்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. 
 

“பஞ்சாயத்து தேர்தல்ல ரொம்பவே பணம் விளையாடுது. எங்கே பார்த்தாலும் வாரியிறைக்கிறாங்க. டோர் கேன்வாஸிங் வேலைக்காக உடன் செல்பவர்களுக்கு, தலைக்கு ரூ.300 கூலி கொடுத்து, சாப்பாடும் போடுறாங்க..” என்றார், அருப்புக்கோட்டை ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிமன்ற உறுப்பினர் (2- வது வார்டு) பதவிக்குப் போட்டியிடும், சி.பி.எம்.தோழர் ராஜா.

first phase local body election virudhunagar election campaign


மேலும் அவர், "இந்த பணப்புழக்கம் குறித்து அதிமுககாரங்க மேல திமுககாரங்க புகார் கொடுத்தாங்க. தேர்தல் அதிகாரிகளும் எங்க ஏரியாவுக்கே வந்து நிலவரத்தை தெரிஞ்சிக்கிட்டு, ஆளும் கட்சிக்காரங்கள வார்ன் பண்ணிட்டுப் போனாங்க. ஆனா.. நிலைமை மாறவே இல்ல. சரி, இதாச்சும் வேலைக்கான கூலின்னு விட்றலாம். ஆனா.. ஓட்டுக்கு பணம் கொடுக்கிறதுதான் பெரிய கொடுமையா இருக்கு. இந்த விஷயத்துல கட்சி வேறுபாடெல்லாம் எதுவும் இல்ல.

கஞ்சநாயக்கன்பட்டியில மொத்தம் 9 வார்டு. 5 வார்டுக்கு போட்டியில்லாம நியமனம் ஆயிட்டாங்க. பாக்கி இருக்கிற 4 வார்டுலதான் போட்டி. இங்கே பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடறாங்க கார்த்திகைச்செல்வியும் நாகஜோதியும். இவங்க இருக்கிறது வெவ்வேறு பெரிய கட்சி.  ஆனா.. சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேரும் ஓட்டுக்கு ரூ.300 கொடுக்கிறாங்க. அப்புறம், ஐயாயிரம் ஓட்டு ஒன்றிய கவுன்சிலர், ஐம்பதாயிரம் ஓட்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடறவங்களும் ஓட்டுக்கு ரூ.300 தர்றாங்க. திமுக, அதிமுக, மதிமுக, பி.ஜே.பி-ன்னு எல்லாரும் ஓட்டுக்கு பணம் தர்ற விஷயத்துல ஒரே ரகம்தான்." என்றார் ஆதங்கத்துடன்.   
 

ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்தந்த ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதனை நிறைவேற்றுவதற்காகவே, மக்களால் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்கள் சேவை என்பது எத்தனை மகத்தானது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் என்ற பெயரில் தமிழகத்தில் என்னென்னவோ நடக்கிறது. அதனை, மக்களோடு சேர்ந்து சட்டமும் வேடிக்கை பார்க்கிறது. 
 

தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் சேர்ந்தே பயணிப்பதாலோ என்னவோ, காட்சிக்கு ஏற்ப துணை நடிகர்களை ஏற்பாடு செய்வதுபோல், தேர்தலின் போதெல்லாம் மக்களையும் தயார் செய்துவிடுகிறார்கள்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

Next Story

தமிழ் படிக்கத் தெரியாத நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Naam Tamilar Party candidate in Virudhunagar constituency Kousi does not know Tamil

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சி. கவுசிக் என்பவர் நேற்று விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஆட்சியர், வேட்பாளர் கவுசிக்கை உறுதிமொழி படிவத்தை வாசிக்க சொன்னார். ஆனால் தனக்கு தமிழ் தெரியாது என்று வேட்பாளர் கவுசிக் கூற, அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வாசிக்க அதனை கவுசிக் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் மேலக்கலங்கலைச் சேர்ந்த மருத்துவரான கவுசிக். நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். கவுசிக்கின் பெற்றோர்கள் வட மாநிலத்தில் வசித்து வருகின்றனர். அதனால் கவுசிக்கும் அங்கேயே படித்ததால் அவருக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும்; வாசிக்க தெரியாது என்று கூறப்படுகிறது.