ADVERTISEMENT

தினகரனுக்கு பதவி கொடுத்ததுதான் சசிகலா செய்த முதல் தவறு!!- திவாகரன்

10:41 AM Oct 28, 2018 | kalaimohan

டிடிவி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை கொடுத்துதான் சசிகலா செய்த முதல் தவறு என சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன்

டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். மேலும் 18 பேரை அதிமுக திரும்ப அழைத்திருப்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செயல். ஆனால் அவர்கள் 18 பேரையும் திரும்ப சேரவிடாமல் யாரோ தடுக்கிறார்கள்.

சசிகலா எடுத்த தவறான முடிவுதான் இப்போது எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் டிடிவி தினகரன் அதிமுகவுடன் சண்டை போடுவதயே செயலாக வைத்திருக்கிறார். மக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பீதியை விதைக்க கூடாது எனக்கூறிய அவர் தேர்தல் வந்தால் சந்திக்க வேண்டியது தானே எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT