2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

First Jallikattu date of 2024 announced

ஜனவரி மாதம் பொங்கல் வரவிருக்கும் நிலையில், தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை என்றாலும், ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வோரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தொடங்கும். அங்குள்ள தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதலில் ஜனவரி 2 ஆம் தேதி ஜல்லிகட்டு போட்டி நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்கலுக்காக தற்போது 6 ஆம் தேதி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளும் தயார், மாடு பிடிவீரர்களும் போட்டிக்காக மூழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வாடிவாசலையும், அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

jallikattu pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe