The first international graduation festival in Tamil Nadu!

தமிழகத்தில் முதன்முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Advertisment

இதில் அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், குஜராத், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்துள்ள கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், இனி ஆண்டுதோறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

கடற்கரை பகுதிகளில் சாகச சுற்றுலா, அலைச்சறுக்கு விளையாட்டுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.