Advertisment

பட்டாசு குடோனில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

Fireworks godown explosion; One person was lose their live

புதுக்கோட்டையில் நிகழ்ந்த பட்டாசு குடோன் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம் கிராமத்தில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கான குடோன் கடையின் பின்புறமே உள்ளது. இந்நிலையில் கடையை விரிவு படுத்துவதற்காக வேல்முருகன் வெல்டிங் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதற்காக ஊழியர்கள் கார்த்திக் ராஜா, சிவனேசன் ஆகியோர் வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெல்டிங் தீப்பொறி பட்டாசு குடோனில் இருந்த பட்டாசுகள் மீது பட்டு வெடிகள் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே கார்த்திக் ராஜா, சிவனேசன் ஆகிய இருவரும் சிக்கிக்கொண்டனர்.

Advertisment

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்தமீட்புப் படையினர் தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் கார்த்திக் ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவனேசன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe