Advertisment

பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 3 பேர் படுகாயம்

 Fireworks Factory issue 3 incident

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.

Advertisment

இந்த விபத்தின் போது பட்டாசு ஆலையில் இருந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Sivakasi viruthunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe