Advertisment

பட்டாசு கடையில் விபத்து; 7 பேர் பலியான சோகம்

Fireworks Factory incident 7 person was involved

பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்காபாளையத்தில் சுந்தர மூர்த்தி என்பவருக்கு சொந்தமான கனிஷ்கர் பட்டாசு ஆலை என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மதியம் புதியதாக தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்து வந்தனர். அப்போது வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த வெடி விபத்தின் போது அருகில் இருந்த கனிஷ்கர் பட்டாசு ஆலைக்கு சொந்தமான பட்டாசு கடையில் பட்டாசு துகள் ஒன்று விழுந்ததால் பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

crackers fire Virudhunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe