விருதுநகரில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

Fireworks factory fire again in Virudhunagar

2022, ஜனவரி 1புத்தாண்டு தினத்தன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வழிவிடுமுருகன் என்பவருக்குச் சொந்தமான, ‘சென்னை உரிமம்’ பெற்ற RKVM பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலைஎன்றபட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

வெடி விபத்து ஏற்பட்டுள்ள பட்டாசு ஆலையில் சுமார் 5 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

fire Sivakasi viruthunagar
இதையும் படியுங்கள்
Subscribe