வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த புளிமேடு பகுதி மலையடிவாரத்தில், கள்ளச்சாரம் விற்பனை செய்தவர்களை தட்டிக்கேட்டவர்கள் மீது, சாராயம் விற்பனை செய்தவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் புளிமேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன், சங்கர், பிரகாஷ் ஆகிய 3 பேர் காயங்களுடன் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவர சாராய விற்பனையார்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் செல்ல அரியூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Show comments