Skip to main content

பட்டாசு ஆலை வெடி விபத்து; 3 பேர் பலி 4 பேர் படுகாயம்! 

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

Firecracker factory issue 3 passes away  4 injured!

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள விஜயகரிசல்குளத்தின் கருப்பசாமி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை மஞ்சள் ஒடைப்பட்டிக் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. டி.ஆர்.ஒ.வின் உரிமப் பெற்ற இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு பணிகள் அங்குள்ள ஆறு அறைகளில் நடந்து வருகிறது. வழக்கம் போல் இன்று காலை சுமார் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு, தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அது சமயம் பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மருந்துகளின் கலவைப் பணியில் கருப்பசாமி மற்றும் செந்தில் ஆகிய இரண்டு பேரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராமல் ஏற்பட்ட உராய்வின் காரணமாகத் தீப்பிடித்து பெருத்த ஒசையுடன் வெடித்ததால் அறைகள் தரை மட்டமாயின.

 

இதில் துரதிருஷ்டவசமாக பட்டாசுத் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மஞ்சள் ஒடைப்பட்டியைச் சேர்ந்த முனிசாமி, கண்ணன், குடும்பபட்டியைச் சேர்ந்த காசி, கொம்மிங்காபுரத்தின் பெருமாள், சரஸ்வதி, அய்யம்மாள், விஜயகரிசல்குளத்தின் செந்தில், கருப்பசாமி உள்ளிட்ட 7 பேர் இதில் சிக்கிப் படுகாயம் அடைந்தனர்.

 

தொடர்ந்து தகவலறிந்த சாத்தூர் வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர். படுகாயத்துடன் மீட்கப்பட்டவர்கள் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செந்தில், கருப்பசாமி, காசி ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து. 2 பெண்கள் உட்பட 4 பேர் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சூழலில் மேல் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையிலிருந்த முனியசாமி மதுரை அரசு மருத்துவமனைக்கும், கோவில்பட்டியில் சிகிச்சை பெற்று வந்த அய்யம்மாள், சரஸ்வதி இருவரும் பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 3 பேர் பலியான பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.