VIRUDHUNAGAR CRACKER PLANT INCIDENT

2022, ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வழிவிடுமுருகன் என்பவருக்குச் சொந்தமான, ‘சென்னை உரிமம்’ பெற்ற RKVMபட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

Advertisment

தகவலறிந்து வந்ததீயணைப்பு வீரர்கள்மீட்டுப்பணியில் இறங்கியுள்ளனர். கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் ரசாயனப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையிலிருந்து மீட்கப்பட்ட 7 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேர்க்கப்பட்ட எழுவரில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி மற்றும் ஊழியர்கள் இருவர்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment