Skip to main content

பெட்ரோல் பங்கை ஒட்டிய கிடங்கில் தீவிபத்து... அச்சத்தில் மக்கள்!

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

 Fire in the warehouse next to the petrol station ... People in fear!

 

தேனியில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி மக்களை அச்சத்திற்குள்ளாகியுள்ளது.

 

தேனி மாவட்டம் கொண்டநாயக்கன்பட்டியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் காம்பவுண்ட் சுவரை ஒட்டியுள்ள தனியார் பிளாஸ்டிக் பைகள் சேமிக்கப்படும் கிடங்கில் திடீரென தீ பற்றியுள்ளது. பெட்ரோல் பங்க்கிற்கு மிக அருகில் உள்ள கிடங்கில் தீப்பற்றி மளமளவென எரிந்து வரும் நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் கிடங்கில் பற்றி எரியும் தீயைப் போராடி  அணைத்து வருகின்றனர். மேலும் அங்கு வானில் கரும்புகை சூழ்ந்ததால் பதற்றமான சூழலே நிலவுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்