கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம்கருமத்தம்பட்டியில்செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீ எரிந்து வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரி கட்டிடங்களுக்குள் இருந்து வெளியேறிய மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில்பாதுகாப்பிற்காகதஞ்சமடைந்துள்ளனர். உள்ளே யாரேனும் சிக்கி உள்ளார்களா என்பது தொடர்பாக தீயணைப்புத்துறை வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.