Advertisment

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து!

Fire at Kovilpatti match factory!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ளதீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில்ஒருவர் காயமடைந்துள்ளார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வள்ளுவர் நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீவிபத்துஏற்பட்டது. இந்த விபத்து சம்பவத்தில் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர் உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தொடர்ச்சியாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்து தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Fire accident police Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe