Skip to main content

புதுச்சேரியில் அரசு பேருந்துக்கு தீ - காடுவெட்டி குரு சாவு எதிரொலியா?

Published on 28/05/2018 | Edited on 28/05/2018
bus


பா.ம.க முன்னணி பொறுப்பாளர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்பல்லோவில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் காடுவெட்டியில் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது.
அதேசமயம் காடுவெட்டி குருவின் சாவின் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தாக்குதலுக்கு ஆளாகின.

 

இந்நிலையில்  புதுச்சேரியில் இன்று இரவு ஒரு அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. 
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்தை கனகசெட்டிகுளத்தில்  மர்ம நபர்கள் வழிமறித்தனர். பின்பு பயணிகளை கீழே இறக்கி விட்ட அந்த மர்ம நபர்கள் பேருந்துக்கு தீ வைத்து தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை காலாப்பட்டு போலீசார்  தேடி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.

Next Story

பாமகவை எதிர்த்து ஜெ.குரு மனைவி போட்டி..!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

ddd

 

கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார் காடுவெட்டி ஜெ.குரு. அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், பாமக எம்எல்ஏவாகவும், வன்னியர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தவர். இவர் மறைந்ததையடுத்து அவரது மகன் கனலரசன், குருவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து மாவீரன் மஞ்சள்படை என்ற அமைப்பைத் தொடங்கினார். 

 

இந்தநிலையில், குருவின் மனைவி சொர்ணலதா மற்றும் மகன் கனலரசன் தரப்பினரும், ஐ.ஜே.கே. கட்சி தரப்பினரும் சந்தித்துப் பேசியுள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான அணியில் ஐ.ஜே.கே.வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐ.ஜே.கே.வுக்கு ஒதுக்கப்பட்ட 40 தொகுதிகளில் ஒன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் தொகுதி. இதில் சொர்ணலதா, ஐ.ஜே.கே. சார்பில் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பை ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து சென்னையில் வெளியிட்டார்.

 

மேலும் பேசிய அவர், “காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களும் வன்னியர் சமூகத்தினரும் இந்தத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐ.ஜே.கே.) மாபெரும் வெற்றியைத் தேடி தருவார்கள். எங்களின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.” என்று தெரிவித்தார்.

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஜெயங்கொண்டம் தொகுதி உள்பட 23 தொகுதிகளைப் பெற்றுள்ளது. இதில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞரும் செய்தித் தொடர்பாளருமான கே.பாலு போட்டியிடுகிறார்.