ADVERTISEMENT
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள ஜெயலலிதாவின் பங்களா வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பங்களா வளாகத்திலுள்ள காய்ந்த இலைகள், வைக்கோல் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்தன. பங்களாவின் சுற்றுச்சுவர் அருகே பற்றிய தீயை அணைக்கும் பணி்யில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு, தீயை அணைத்தனர்.
ADVERTISEMENT
ஜெயலலிதா இருந்தபோது அவ்வப்போது ஓய்வு எடுக்க பயன்பட்டது இந்த பங்களா. சசிகலா உறவினர்கள் பராமரித்து வந்த பங்களாவில் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, சசிகலாவும் சிறையில் இருக்க யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது எப்பொழுதும் போலவே மர்மமாக இருக்கிறது.
Show comments