Skip to main content

ஹோட்டலில் தீ-தூங்கிக்கொண்டிருந்த 10 பேர் உயிரிழப்பு!!

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
fire

 

டெல்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் என்ற சொகுசு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 26 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

திடீர் தீ விபத்து காரணமாக அருகில் உள்ள ஹோட்டல்களிலும் தீ பரவும் என்பதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்  ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் 10 பேர் இறந்துள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை, விசாரணையில் இதற்கான காரணம் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இந்த சம்பவம் கரோல்பாக் பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்