Skip to main content

தாம்பரத்தில் கார் விபத்து... நொறுங்கிய காரில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புத் துறை போராட்டம்!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Fire department fights to rescue those trapped in the wrecked car!

 

தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கி வந்த கார், விபத்துக்குள்ளாகியதில் காரினுள் சிக்கிக்கொண்ட மூன்று பேரை மீட்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

 

Fire department fights to rescue those trapped in the wrecked car!

 

தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கி, பிரதான சாலையான ஜி.எஸ்.டி சாலையில் வந்த லாரி ஒன்று, திடீரென டயர் வெடித்ததால் நிலைதடுமாறி அருகில் இருந்த சாலை தடுப்பின் மீது மோதி நின்றது. அப்பொழுது, பின்னால் வேகமாக  வந்த கார், நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதிய நிலையில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில், காரில் இருந்த வயதான பெண்மணி உப்பட மூன்று பேரும் சிக்கிக்கொண்டனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், காரினுள் சிக்கியவர்களை மீட்க அரை மணிநேரமாகப் போராடி வருகின்றனர். உடைந்த காரின் பாகங்களை வெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜி.எஸ்.டி சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.