தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கி வந்தகார், விபத்துக்குள்ளாகியதில் காரினுள் சிக்கிக்கொண்டமூன்று பேரைமீட்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.
தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கி, பிரதான சாலையானஜி.எஸ்.டி சாலையில் வந்தலாரிஒன்று, திடீரெனடயர் வெடித்ததால்நிலைதடுமாறி அருகில் இருந்தசாலைதடுப்பின்மீது மோதி நின்றது. அப்பொழுது, பின்னால்வேகமாகவந்தகார், நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதிய நிலையில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில், காரில்இருந்தவயதான பெண்மணி உப்படமூன்று பேரும் சிக்கிக்கொண்டனர்.சம்பவம் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், காரினுள்சிக்கியவர்களை மீட்க அரை மணிநேரமாகப்போராடி வருகின்றனர். உடைந்த காரின்பாகங்களைவெட்டி எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜி.எஸ்.டி சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.