Advertisment

மத்திய சேமிப்பு கிடங்கில் தீ விபத்து... துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த மணலூரில் மத்திய அரசின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இதில் விவசாயிகளின் விளைபொருள், உணவு பாதுகாப்புக்கழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பல்வேறு உணவு தானிய பொருட்களை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் மற்றும் நெல் உளுந்து உள்ளிட்ட பொருட்கள் இதில் உள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அரிசி மூட்டைகள் உள்ள பகுதியில் திடீர் தீப்பற்றி புகை வெளிவந்துள்ளது. இதனை பார்த்த ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயை உடனடியாக அணைத்தனர்.

Advertisment

 Fire in central storage warehouse ... Avoiding major accident due to speeding

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதுகுறித்து கிடங்கு மேலாளர் துளசிராமன் கூறுகையில், மின்கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளது. அரிசி மூட்டைகளை மூடியிருந்த தார்ப்பாய் மட்டுமே எரிந்துள்ளது மற்ற சேதங்கள் எதுவும் இல்லை. தீயை அணைக்கும் போது அரிசி மூட்டைகளில் தண்ணீர் பட்டு உள்ளது. இதனை 24 மணி நேரத்தில் காயவைத்து வேறு சாக்குகளில் அரிசி பிடிக்கப்படும் இதனால் எந்த சேதமும் இல்லை என்றார்.

Fire accident CHITHAMPARAM Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe