Advertisment

வங்கியில் தீ விபத்து; வேளச்சேரியில் பரபரப்பு

Fire at Bank of India Bank; The excitement in Velachery

சென்னை வேளச்சேரியில் உள்ள 'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை வேளச்சேரி பிரதான சாலை தண்டீஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது 'பேங்க் ஆப் இந்தியா' வங்கி. அருகிலேயே ஏடிஎம் மையமும் இருக்கிறது. இந்தநிலையில் இங்கு கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக திடீரென அதிக அளவிலான புகை வெளிப்பட்டது. அருகில் வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

Advertisment

தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. திருவான்மியூர், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை நீடித்தது. தற்பொழுது தீயணைப்பு கருவிகளை முதுகில் கட்டிக்கொண்டு வீரர்கள் உள்ளே சென்றுள்ளனர். புகைப்போக்கியை பொருத்தி தற்பொழுது புகை வெளியேற்றப்பட்டு வருகிறது. வங்கியின் எந்த பகுதியில் தீப்பற்றியுள்ளது என்பது தெரியாமல் தற்பொழுது வரை தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர். அதிகப்படியான புகை வெளியேற்றதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Chennai incident velacherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe