Skip to main content

குரங்கணி தீ விபத்து - இரண்டு மாதத்தில் விசாரணை அறிக்கை! மிஸ்ரா பேட்டி

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
mishra


தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் தொகுதியில் குரங்கணி கொழுக்கு மலைக்கு சுற்றுலா பயணிகள் 39பேர் ட்ரெக்கிங் சென்றனர். அப்போது குரங்கணி மலை பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த தீ விபத்து பற்றி விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை விசாரணை ஆணையராக நியமித்தார். இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அதுல்ய மிஸ்ரா தேனி வந்தவர். அங்குள்ள அதிகாரிகளிடம் முதல் கட்டமாக ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மிஸ்ரா... தீ விபத்து நடந்த குரங்கணி கொழுக்குமலைக்கு சென்று தீ பிடித்த பகுதிகளை பார்வையிட்ட பின் விசாரணை நடத்த இருக்கிறேன். அதன் பிறகு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் புகார் மனுக்கள் வாங்கி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்.

அதோடு வனத்துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தீ விபத்தில் சிக்கி தப்பியவர்களிடமும் விசாரணை நடத்திய பின் மதுரை மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்வர்களிடமும் விசாரணை செய்யப்படும். ஏற்கனவே இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் நீதிபதியிடம் வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறார்கள் அதையும் பெற்று விவாதிக்க இருக்கிறேன். அதன் இறுதியாக மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை செய்தபின் இரண்டு மாதங்களுக்குள் இந்த தீ விபத்துக்கான அறிக்கையை முதல்வரிடம் கொடுக்கப்படும் என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

6 வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ... அச்சத்தில் கொடைக்கானல்!

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Wildfire burning about the 6th day ... Kodaikanal in fear!

 

கொடைக்கானலில் 6 வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ அங்கிருப்போருக்கு அச்சுறுத்தலைத் தந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளைப்பாறை, பெருமாள் மலை உள்ளிட்ட கிட்டத்தட்ட 40 ஏக்கர்  வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏற்கனவே மச்சூர் வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வெள்ளைப்பாறை பகுதியில் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. அதேபோல் கூக்கால் கிராமத்தில் உள்ள பழம்புத்தூர் வனப்பகுதியிலும் காட்டுத்தீயின் பரவல் அதிகமாக உள்ளது. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காட்டுத்தீ பரவுதல் என்பது எளிதில் நிகழக்கூடிய ஒன்றாகிவிட்டது. தீத்தடுப்பு கோடுகள், எதிர்த்தீ அமைத்தும் வனத்துறையினர் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த காட்டுத்தீயால் வனவிலங்குகள் ஊருக்குள் இடப்பெயர்வு செய்வது அதிகரிக்கும் என கொடைக்கானல் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.   

 

 

Next Story

கொடைக்கானல் அருகே வனப்பகுதிக்குள் வேகமாக பரவும் காட்டுத் தீ!

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

kodaikanal forest area incident forest officers water

 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலை வனபகுதிக்குள் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில், வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

 

பெருமாள்மலை வனப்பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழன்கிழமை இரவு முதல் மச்சூர் வனப்பகுதியில் எரியத் தொடங்கிய காட்டுத் தீ, இன்று காலை வரை பல்வேறு பகுதிகளுக்கு பரவி உள்ளது. பெரும் பரப்பளவில் எரியும் காட்டுத் தீயால் வான்முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. 

 

தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவு முதல் காட்டுத் தீயை தீத்தடுப்பு எல்லைகளை அமைத்தும், புதர்களை வெட்டி தடுப்புகளை அமைத்தும் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் எரியும் காட்டுத் தீயால், அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் மற்றும் பூச்சி இனங்கள், ஊர்வன ஆகியவை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.